ஜனதா தளம் [[1989]] [[காங்கிரஸ் கட்சி]] தலைவரும் இந்தியப் பிரதமருமான [[ராஜிவ் காந்தி]]யின் தலைமையில் நடந்த [[போபர்ஸ் ஊழல்]] குற்றசாட்டினை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால். [[ராஜீவ் காந்தி]]யின் [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] இரண்டாவது முறையாக தொல்வி அடைந்தது. இத்தேர்தலில் [[வி. பி. சிங்]] ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது. ஜனதா தளம் கட்சி தலைமையிலான தேசிய முன்னணி என்ற கூட்டணிக்கு [[பாரதிய ஜனதா கட்சி]] வெளியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியில் பங்கு கொண்டது. [[வி. பி. சிங்]] இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் ஆட்சியில் பங்கு கொண்டார். [[1990]] இல் கூட்டணியின் பிளவால் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் [[வி. பி. சிங்]]கின் ஜனதா தளம் ஆட்சி தொல்வி அடைந்ததை அடுத்து புதிய அரசான ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [[சந்திரசேகர்]] தலைமையிலான '''சமாஜ்வாடி ஜனதா கட்சி''' என்ற அவர் உருவாக்கிய புதிய கட்சிக்கு [[இந்திய தேசிய காங்கிரஸ்]] மற்றும் [[பாரதி ஜனதா கட்சி]] பேராதரவுடன் ஆட்சி நடத்தியது. ஜனதா தளம் கட்சி [[வி. பி. சிங்]] தலைமையில் இயங்கியது. ஆனால் [[சந்திரசேகர்]] ஆட்சியும் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. (1990-1991) கூட்டணி விரிசலினால் விரைவிலேயே தேர்தலை சந்திக்க நேர்ந்து பின்பு 1991ல் முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] மரணத்தால் [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] அத்தேர்தலில் ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவாகி [[பி. வி. நரசிம்ம ராவ்]] [[காங்கிரஸ் கட்சி]]யில் அடுத்த பிரதமரானார்.