பதஞ்சலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
விரிவாக்கம் |
||
வரிசை 1:
[[File:patanjali.jpg|thumb|150px|பதஞ்சலி முனிவர்]]
'''பதஞ்சலி'''
== தொன்மம் ==
ஓரு சமயம் [[ஆதிசேஷன்]] சிவனின் [[ஆனந்த தாண்டவம்|ஆனந்த தாண்டவத்தைக்]] காணவேண்டுமென கயிலை சென்று சிவனிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு சிவன் பூலோகத்தில், தில்லை வனத்தில் தான் காட்சியளிக்க உள்ளதாகவும், அதைக் காண ஏதுவாக [[அத்திரி|அத்திரி மகசிரி]]யின் மகனாக வளர்ந்து வருமாறு ஆதிசேசனை பணிக்கிறார். அத்திரி மகரிசி ஆற்றில் சந்தியா வந்தனம் செய்யும்போது ஐந்து முகங்களுள்ள ஒரு குழந்தையாக அவர் கைகளில் வந்து விழுகிறார். மகரிசியும் அந்தக் குழந்தையை எடுத்து பதஞ்சலி என்ற பெயரிட்டு வளர்க்கிறார்.
அத்திரி மகசிசியும், [[புலிகால் முனிவர்|புலிகால் முனிவரும்]] சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விருப்பம் கொண்டு தவம் செய்கின்றனர். அப்போது பதஞ்சலியும் அவர்களுடன் சேர்ந்து தவமியற்றினார். இவர்களின் தவத்தற்கு இரங்கிய ஈசன் ஒரு [[வியாழக் கிழமை]]யுடன் கூடிய [[தைப்பூசம்|தைப்பூச]] நாளில் இவர்களுக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருள்கிறார்.
இந்த பதஞ்சலி முனிவர் ஒரே நேரத்தில் ஆயிரம் சீடர்களுக்கு ஆயிரம் தலைகளுடன் திரை மறைவில் இருந்து வியாகரண மகாபாஷ்யத்தைக் கூறினார் என்று தொன்மங்கள் குறிப்பிடுகின்றன.
== தோற்ற அமைதி ==
பதஞ்சலி முனிவரின் தோற்றமானது இடுப்புவரை மனித உடலாகவும், இடுப்புக்குக் கீழே நாகத்தில் உடலாகவும் இருக்கும். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடைபோல இருக்கும். இவர் ஆதிசேசன் அம்சம் என்பதால் வாயில் கோரைப் பற்கள் இருக்கும்.<ref>[https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/622297-chithira-pechu.html சித்திரப் பேச்சு: ஆதிசேஷனின் அவதாரம் பதஞ்சலி முனிவர், ஓவியர் வேதா, [[இந்து தமிழ் (நாளிதழ்)]], 2021 சனவரி 14]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
|