[[சன்னி இசுலாம்|சன்னி]] இசுலாமைப் பொறுத்தவரை, அது ராசிதுன் கலீபாக்களை முழுமையாக ஆதரிக்கின்றது. இவர்கள் முகம்மது நபியின் வழிமுறைகளின்படியே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் நம்புகின்றது. மேலும் இந்த நால்வரில் அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகிய இருவரின் மகள்களை முகம்மது நபி(சல்)திருமணம் செய்திருக்கிறார். மேலும் உதுமான்(ரலி)மற்றும் அலி(ரலி)ஆகிய இருவருக்கு தனது மகள்களை திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். மேலும் தன் வாழ்நாளில் பல நேரங்களில் தனது தோழர்களை மற்றவர்கள் திட்டுவதை விட்டு விலகுமாறு பணித்திருக்கிறார். இன்னும் இந்த நான்கு நபித் தோழர்களும் முகம்மது நபியின் வாயினால் சொர்க்கத்திற்கான நற்செய்தி பெற்றவர்கள். எனவேதான் இவர்களை ''நேர்வழி பெற்ற கலீபாக்கள்'' என அழைக்கின்றனர்.