இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 134:
டெல்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் பித்தளை மற்றும் செம்பு நாணயங்களை வெளியிட்டார். இவை தங்க நாணயத்தின் மதிப்பிற்கு நிகராகக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரானி, துக்ளக் உலகின் அனைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளையும் இணைக்க விரும்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். துக்ளக் அதிக அளவு தங்கத்தினை மக்களுக்கு வெகுமதியாக வழங்கியதால் அரசின் கருவூலம் தீர்ந்துவிட்டதாகவும் பரணி எழுதியிருந்தார். இந்த சோதனை தோல்வியுற்றது, ஏனென்றால் இந்து குடிமக்களில் பெரும்பாலோர் பொற்கொல்லர்கள், எனவே அவர்களுக்கு நாணயங்களை தயாரிப்பது எப்படி என்று தெரியும். எனவே அவர்கள் அதிக அளவு போலி நாணயங்களை உருவாக்கினர். அந்நாணயங்களை ஆயுதங்களையும், குதிரைகளையும் வாங்க பயன்படுத்தினர். இதன் விளைவாக, நாணயங்களின் மதிப்பு குறைந்து. நாணயங்கள் ''கற்களைப் போல பயனற்றவை ஆனது'' என ''சதீஷ் சந்திரா'' எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டார்.
====விஜயநகர பேரரசு (கி.பி. 1336-1646)====
விஜய நகரப் பேரரசின் நாணயமுறை மிகவும் சிக்கலானதாகும். அப்பேரரசின் மறைவிற்குப் பின்னரும் அந்நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இவர்கள் வெளியிட்ட [[பகோடா (நாணயம்)|பகோடா]] நாணயத்தில் [[வராக அவதாரம்|வராகம்]] பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் அடிப்படை அலகு 3.4 கிராம் தங்கமாகும்.
==மேற்கோள்கள்==
|