இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
விரிவாக்கம் செய்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 133:
====முஹம்மது பின் துக்ளக்====
டெல்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் பித்தளை மற்றும் செம்பு நாணயங்களை வெளியிட்டார். இவை தங்க நாணயத்தின் மதிப்பிற்கு நிகராகக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரானி, துக்ளக் உலகின் அனைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளையும் இணைக்க விரும்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். துக்ளக் அதிக அளவு தங்கத்தினை மக்களுக்கு வெகுமதியாக வழங்கியதால் அரசின் கருவூலம் தீர்ந்துவிட்டதாகவும் பரணி எழுதியிருந்தார். இந்த சோதனை தோல்வியுற்றது, ஏனென்றால் இந்து குடிமக்களில் பெரும்பாலோர் பொற்கொல்லர்கள், எனவே அவர்களுக்கு நாணயங்களை தயாரிப்பது எப்படி என்று தெரியும். எனவே அவர்கள் அதிக அளவு போலி நாணயங்களை உருவாக்கினர். அந்நாணயங்களை ஆயுதங்களையும், குதிரைகளையும் வாங்க பயன்படுத்தினர். இதன் விளைவாக, நாணயங்களின் மதிப்பு குறைந்து. நாணயங்கள் ''கற்களைப் போல பயனற்றவை ஆனது'' என ''சதீஷ் சந்திரா'' எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டார்.
====விஜயநகர பேரரசு (கி.பி. 1336-1646)====
விஜய நகரப் பேரரசின் நாணயமுறை மிகவும் சிக்கலானதாகும். அப்பேரரசின் மறைவிற்குப் பின்னரும் அந்நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இவர்கள் வெளியிட்ட [[பகோடா (நாணயம்)|பகோடா]] நாணயத்தில் [[வராக அவதாரம்|வராகம்]] பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் அடிப்படை அலகு 3.4 கிராம் தங்கமாகும்.
====தொடக்ககால முகலாயப் பேரரசர்கள் (கி.பி. 1526-1540)====
முகலாய அரசர் [[பாபர்]] ''ஷாருகி'' எனும் நாணயங்களை வெளியிட்டார். [[தைமூர்|தைமூரின்]] மூத்த மகன் ''ஷா ருக்'' நினைவாக ஷாருகி என இந்நாணயத்திற்கு ''ஷாருகி'' எனப் பெயர் சூட்டினார். நாணயத்தில் ஒருபுறம் கலீபாக்களையும் மறுபுறம் அரசரின் பெயரும், ஹிஜ்ரி வருடமும், அச்சடிக்கப்பட்ட நகரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். பாபரின் வாரிசான [[நசிருதீன் உமாயூன்|ஹூமாயூனும்]] இம்முறையிலேயே நாணயங்களை வெளியிட்டார்.
====சுர் பேரரசு(பொ.வ. 1540–1556)====
[[File:Sher_shah's_rupee.jpg|thumb|[[சேர் சா சூரி|ஷெர் ஷா சூரி]] அறிமுகப்படுத்திய ரூபாய் நாணயங்கள்.]]
தற்கால [[ரூபாய்|ரூபாயின்]] முன்னோடி [[சேர் சா சூரி|ஷெர் ஷா சூரி]] அறிமுகப்படுத்தப்பட்ட நாணயங்கள் ஆகும். இவர் காலத்திற்கும் முன்னர் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் ''ரூப்யா'' என அழைக்கப்பட்ட போதும் இவர் வெளியிட்ட 178 கிராம் நிலையான எடைகொண்ட வெள்ளி நாணயங்கள் மட்டுமே ''ரூப்யா'' என அழைக்கப்பட்டன.
===பிற்கால முகலாய பேரரசர்கள் (பொ.வ. 1555–1857)===
====அக்பர்====
[[File:Silver Rupee Akbar.jpg|thumb|இஸ்லாமிய நம்பிக்கை அறிவிப்பின் கல்வெட்டுகளுடன் அக்பரின் வெள்ளி நாணயம். இதில் "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" எனப் பொறிக்கப்பட்டிருந்தது.]]
அக்பர் வெளியிட்ட நாணயங்களில் வெளியிட்ட தேதி எண்களால் எழுதப்படாமல் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயங்களில் "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நூற்றாண்டினைக் குறிக்க நானயங்களில்''ஆல்ஃப்'' எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னரே ''ஹிஜ்ரி'' 990 களிலேயே ''ஆல்ஃப்'' சொல் பொறிக்கப்பட்டது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாணய_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது