தமிழகதமிழ்நாடு அரசின் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் கீழாகச் செயல்பட்டு வரும் [[செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்|செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத்]] தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழிலேப் பேசும் தனித்தமிழ் பற்றாளர்களுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் <big>தூய தமிழ் பற்றாளர் விருது</big> வழங்கப்படும். இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 20,000/- வழங்கத் தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. (தமிழ்நாடு அரசாணை (நிலை) எண்: 129, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நாள்: 30-12-2020)<ref>[https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr130121_25.pdf பிடிஎப் கோப்பிலான தகவல்]</ref>