நற்றமிழ்ப் பாவலர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தமிழ்நாடு அரசின் தமிழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:32, 11 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் கவிதைப் படைப்புகளில் (மரபுக்கவிதை, புதுக்கவிதை) பிற மொழிக் கலப்பில்லாத தூய தமிழ்ச் சொற்களையும், புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தும், இரு பாவலர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 50,000/- வழங்கத் தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. (தமிழ்நாடு அரசாணை (நிலை) எண்: 131, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நாள்: 30-12-2020)[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு - பிடிஎப் கோப்பிலான தகவல்