பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
25 சனவரி 2019 அன்று உச்ச நீதிமன்றம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு தடை வழங்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/india/supreme-court-10-quota-to-ews-5554788/|title=SC refuses to stay 10% EWS quota|date=2019-01-25|website=The Indian Express|language=en-IN|access-date=2019-01-25}}</ref>இவ்வழக்குகளை விசாரிக்க 6 ஆகஸ்டு 2020 அன்று 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் நிறுவியது.<ref name="SCIObserver2020">{{cite web|url=https://www.scobserver.in/court-case/reservations-for-economically-weaker-sections/ews-plain-english-of-referral-order|title=EWS - Plain English of Referral Order|website=[[Supreme Court Observer]]|date=2020-08-06|publisher=[[Legal Observer Trust]]|access-date=2020-11-21|archive-date=2020-09-21|archive-url=https://web.archive.org/web/20200921154141/https://www.scobserver.in/court-case/reservations-for-economically-weaker-sections/ews-plain-english-of-referral-order|url-status=live}}</ref>
==விளக்கம் == ங்
இடஒதுக்கீடு அற்ற பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக [[இந்திய அரசு]] இந்திய அரசியலமைப்பில் (124-வது) திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] நிறைவேற்றியது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (EWS) மற்றும் பொருளாதராத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) ஆகிய இரண்டின் பொருள் குறித்து இந்தியாவில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (EWS) யார் என்பது குறித்து [[இந்திய அரசு]] விளக்கியுள்ளது. ஆனால் யார் [[பிற்படுத்த வகுப்பினர்|பொருளாதராத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்]] (EBC) மற்றும் [[மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு| பொருளாதாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்]] (MEBC) என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே விளக்குகின்றனர். இந்தியாவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் குறித்தான [[மக்கள் தொகை]] கணக்கெடுப்பு இல்லாத நிலையில், [[இந்திய அரசு]] 10% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்பதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான தகுதி முற்றிலும் ஆண்டு குடும்ப வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டுமல்லாமல், வைத்திருக்கும் சொத்தின் அடிப்படையிலும் உள்ளது. [[இந்திய அரசு]]க்கு சொந்தமான கல்லூரிகளில் சேருவதற்கும், இந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்புகளுக்கும் இந்திய அரசே வருமான வரம்பை நிர்ணயித்துள்ளது. பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான தகுதிக்கான அளவுகோல்களை மாற்றுவதற்கும், இப்பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரும் நபர்களின் வருமான வரம்பை மேலும் விரிவாக்குவதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது, இது அரசுக்கு சொந்தமான கல்லூரிகளிலும், மாநில அரசின் வேலைகளிலும் மட்டுமே அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றதாக கருதப்படும்.
1 பிப்ரவரி 2019 முதல் பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும்<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/india/10-reservation-for-economically-weak-in-general-category-comes-into-force/articleshow/67528010.cms|title=10% reservation for economically weak in general category comes into force - Times of India|website=The Times of India|access-date=2019-01-23}}</ref> இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக தமிழ்நாட்டின் சில அரசியல் கட்சிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
==இதனையும் காண்க==
|