சமூக இயக்கமாக இருந்த திராவிட இயக்கம், 1949- ல் திமுக அரசியல் கட்சியாக உருவெடுத்து, 1967-ல் முதல்முறையாக அண்ணாத்துரை தலைமையில் ஆட்சியை வென்றது. அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தேற்வானார்தெரிவானார். அன்று முதல் கருணாநிதி ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்துள்ளார். கருணாநிதி தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக உள்ளார். 2008–2009 இல் இவரது ஆட்சியின்போது பெரும் ஈழத்தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவண் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித பலனைத் தந்த நடவடிக்கைகளை எடுக்காதற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் 2018 ஆண்டு இயற்கை எய்தினார்.<ref>[http://www.thinaboomi.com/2011/04/24/2180.html ஈழத்தமிழர்கள் வெறுப்பது தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான்-விஜயகாந்த்]</ref><ref>[http://dinamani.com/latest_news/article658020.ece?service=print கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார்: தமிழருவி மணியன்]</ref> இதே காலப் பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.<ref>[http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=4667 ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகங்கள்: வைகோ]</ref>