புதிய தமிழ்ப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2402:4000:1080:8CBB:2:2:5BCD:93D3ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
=== தமிழ் மாணவர் பேரவை ===
 
இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் வெற்றிடம் ஒன்று தோன்றியிருந்தது. புரட்சிகர அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை தமிழர் தரப்பால் உணரப்பட்டது. இந்த நிலையில் [[''தமிழ் மாணவர் பேரவை]]'' என்ற மாணவர் இயக்கம் 1971 சனவரி 23 அன்று [[1970வல்வெட்டித்துறை]]யில் ஆம்சத்தியசீலன், ஆண்டுயோகரத்தினம் போன்றோரால் தொடங்கப்பட்டது.<ref>''தமிழ் மாணவர் பேரவை அங்குரார்ப்பணம்', [[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாடு]], சனவரி 25, 1971</ref> இலங்கை அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் நடுவே பெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. இவ்வமைபின் முக்கியமானவராக வே. பிரபாகரன் இயங்கினார். தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்தத் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான [[வல்வெட்டித்துறை]]யைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர்.
 
இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை பொறுப்பேற்றுக் கொண்டு 16 வயதான வே. பிரபாகரன் நான்கு பேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். வே. பிரபாகரன் மட்டும் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும், ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன.
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தமிழ்ப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது