பி. டி. ஆர். பழனிவேல்ராசன்பழனிவேல் ராஜன் [[1938]] ஆம் ஆண்டில் [[இலங்கை]] [[கண்டி|கண்டியில்]] உள்ள டிரினிடி பள்ளியில் சேர்க்கப்பட்டார். நான்காண்டுகள் அங்கு பயின்ற அவர் அதன் பின்பு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[நீலகிரி மாவட்டம்]], [[குன்னூர்]] சூசையப்பர் பள்ளியிலும் அதன் பின்பு [[1946]] இல் [[சேலம் மாவட்டம்]], [[ஏற்காடு]] மாண்ட்போர்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து [[சென்னை]] கிறித்துவக் கல்லூரியில் [[வேதியியல்]] பாடத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்று, பின் [[சென்னை]] சட்டக்கல்லூரியில் சேர்ந்து [[1954]] இல் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். [[1954]] இல் [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்றத்தில்]] வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு, மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கினார்.