இந்த எதிர்பாராத நிகழ்வைத் தொடர்ந்து, [[போர் முனை]]யிலிருந்துமுனையிலிருந்து தப்பிச் சென்ற அலிய திருமலை ராயன், பேரரசின் செல்வத்தின் பெரும் பகுதியையும் எடுத்துக் கொண்டு, [[பொம்மை அரசன்|பொம்மை அரசனான]] சதாசிவ ராயனுடன் [[பெனுகொண்டா]]வுக்குத் தப்பி ஓடினான். அங்கே இருந்தபடி பேரரசைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பின்னர் தலைநகரத்தையும் [[சந்திரகிரி]]க்கு மாற்றினான். ஆண்டுகொண்டிருந்த துளுவ அரச மரபைச் சேர்ந்த அனைவரும் எதிரிப் படைகளால் கொல்லப்பட்டதனாலும், ராம ராயன் அரச நிர்வாகத்தில் கொண்டிருந்த செல்வாக்குக் காரணமாகவும் அரசபதவி அரவிடு மரபினருக்குச் சேர்ந்தது.