பரதச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 29:
===Conquest and administration===
[[File:भरत-बाहुबली युद्ध.jpg|thumb|
[[File:14 Ratna of Chakravartin.png|thumb|சக்கரவர்த்தியின் 14
பரதர், சமண அண்டவியலின் தற்போதைய அரைச் சுழற்சியின் முதற் ''சக்கரவர்த்தி''யாகக் (ஆட்சியாளர்களின் ஆட்சியாளர்) நம்பப்படுகிறார்.{{sfn|Jaini|2000|p=341}}{{sfn|Wiley|2004|p=54}} சமண மரபின்படி, ரிசபநாதர் தாம் ஒரு ''முனி''யாக (சமணத் துறவி) மாறிய வேளை தமது அரசை தம்முடைய நூறு புதல்வர்களிடையே பகிர்ந்தளித்தார். இதன்போது, பரதர் விநித நகரத்தைப் (அயோத்தியா) பெற்றதாகவும், பாகுபலி போதனாபூர் நகரைப் (போதன்) பெற்றதாகவும் கூறப்படுகிறது.{{sfn|Titze|1998|p=8}} மேலும், முடிசூட்டிக்கொண்ட பின் பரதர் உலகை வெற்றி கொள்வதற்கான நீண்ட பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தமது ''திக்குவிசய''த்தின் போது (அனைத்துத் திசைகளிலுமுள்ள உலகின் ஆறு பிரிவுகளையும் வெற்றிகொள்ளல்) இவர் ஒன்பது ''நிதி''களையும் (மிகவும் பெறுமதி வாய்ந்த செல்வங்கள்) பதிநான்கு ''ரத்தினங்''களையும் (மணிகள்) அடைந்ததாக நம்பப்படுகிறது. தமது உலக வெற்றிப் பயணத்தை நிறைவு செய்த பின், அவர் தமது பாரிய படையுடனும், இறைநிலை பொருந்திய ''சக்கர-ரத்தின''த்துடனும் (பற்களுடைய விளிம்புடைய சுழலும், வட்டத்தட்டுப்போன்ற பெருங்கருவி) தமது தலைநகரான அயோத்தியை நோக்கி ஊர்வலமாகச் சென்றதாகக் கூறப்படுகின்றது.{{sfn|Vijay K. Jain|2013|p=x}}
தலைநகரின் நுழைவாயிலில் ''சக்கர-ரத்தினம்'' சுழலாமல் நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பரதரின் ஆணைக்குக் கட்டுப்பட மறுத்த 99 உடன்பிறப்புக்களை வெல்லவேண்டுமென்பதை அது குறிப்பால் உணர்த்தியது. அவர்களுள் 98 உடன்பிறப்புக்கள் துறவிகளாக மாறி தமது அரசுகளைப் பரதருக்குக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.{{sfn|Vijay K. Jain|2013|p=x-xi}} பாகுபலி அவருக்கு அடிபணிய மறுத்து அவருடன் சண்டையிடுமாறு அறைகூவல் விடுத்தார்.{{sfn|Champat Rai Jain|1929|p=143}} பரதருக்கும் பாகுபலிக்குமிடையில் மூன்று விதமான போட்டிகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவையாவன, கண்-சமர் (ஒருவரையொருவர் கண்கொட்டாமல் பார்த்தல்), ''சல-யுத்த'' (நீர்ச்சண்டை) மற்றும் ''மல்ல-யுத்த'' (மற்போர்) என்பனவாகும். பாகுபலி இம்மூன்று போட்டிகளிலுமே வென்றதாகக் கூறப்படுகின்றது. இறுதிப் போரில், பாகுபலி பரதரை நிலத்தில் தூக்கியெறிவதற்குப் பதிலாக தமது தோள்களில் ஏற்றிக்கொண்டார். அதற்குப் பதிலாக, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக பாகுபலி பரதரை நிலத்தில் மெதுவாக அமர்த்தினார் எனக்கூறப்படுகிறது. அவமானமும் சினமும் பொங்கிய பரதர் தமது ''சக்கர-ரத்தினத்தை'' அழைத்ததாக நம்பப்படுகிறது. பாகுபலிக்குத் தீங்கு விளைவிக்காத அப் போர்ப்படை பாகுபலியை சுற்றி வலம் வந்துவிட்டு அமைதியடைந்ததாக நம்பப்படுகிறது. இவ்வாறான இறைதன்மை பொருந்திய போர்க்கருவிகள் சமண மரபின் படி, தமது உரிமையாளரின் நெருங்கிய உறவினர்களை எதிர்கொள்ளும்போது தமது வலுவை இழந்துவிடுவதாகக் கருதப்படுகிறது.{{sfn|Vijay K. Jain|2013|p=xi}} இதன் பின்னர், பாகுபலி துறவு பூணும் எண்ணம் கொண்டு தமது அரசை விடுத்துத் துறவியானார்.{{sfn|Champat Rai Jain|1929|p=145}}
சமண மரபின் படி, பரதர் தற்போதைய அரைச்-சுழற்சிக் காலத்தின் முதலாவது சட்டவாக்குனராகக் கருதப்படுகிறார்.{{sfn|Jain|2008|p=110}} ரிசபநாதரால் உருவாக்கப்பட்ட, ''சத்திரியர்'' (போர்வீரர்கள்), ''வைசியர்'' (வணிகர்) மற்றும் ''சூத்திரர்'' (வேலையாட்கள்) ஆகியோரைக் கொண்ட மூன்றடுக்கு வர்ண-முறைமையில் நான்காவது வர்ணத்தவரான ''பிராமணரை''ச் சேர்த்தவர் இவரே எனக் கூறப்படுகிறது.{{sfn|Jaini|2000|p=341}}{{sfn|von Glasenapp|1999|pp=352–353}}{{sfn|Natubhai Shah|2004|pp=16-17}} மரபுகளில் கூறப்பட்டுள்ளபடி, பிராமணருக்கான கடமைகள், தியானித்தல், கற்றல், கற்பித்தல் மற்றும் அறிவைத் தேடுதல் என்பனவாகும்.{{sfn|Natubhai Shah|2004|p=17}}
=== Renunciation ===
|