'''நா.பார்த்தசாரதி''' ([[டிசம்பர் 18]], [[119321932]] - [[டிசம்பர் 13]], [[1987]]) புகழ் பெற்ற தமிழ் [[புதினம்|புதின]] (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள [[கதை மாந்தர்|கதைமாந்தர்களைப்]] பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான [[குறிஞ்சி மலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]] மற்றும் ''பொன் விலங்கு'' [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களாகவும் வந்துள்ளன. [[சாகித்ய அகாதமி]] விருது பெற்றுள்ளார்.