பயனர்:Gowtham Sampath/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3199891 by Gowtham Sampath (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Blanking Undo
வரிசை 1:
<center><big>''':'''</big></center>
 
<center>[[படிமம்:Vanidasan.jpg|100px]]</center>
* '''கவிஞரேறு வாணிதாசன்''', புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார்.
* '''பிறப்பு''': சூலை 22 1915 - ஆகத்து 7, 1974)
* '''பெற்றோர்''': தந்தை: திருக்காமு, தாய் : துளசியம்மாள்
* '''புனைப்பெயர்''':ரமி
* '''சிறப்பு பெயர்கள்''': கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், தமிழகத்தின் தாகூர்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
* புதுவையை அடுத்த வில்லியனூரில் 22-7-1915ஆம் நாள் தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட அரங்க.திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் '''அரங்கசாமி''' என்ற '''எத்திராசலு''' என்பதாகும். இவர் ''ரமி'' என்னும் புனைப்பெயரும் கொண்டவர்.
* இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும், தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று. இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
* உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பிரெஞ்சு மொழியிலூம் புலமை பெற்றவர். 'தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
 
== குடும்பம் ==
வாணிதாசன் 1935ஆம் ஆண்டில் தன் சிற்றன்னைக்கு தம்பி மகளான ஆதிலட்சுமி என்பவரை மணந்தார். அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். அவர்களுள் மூத்தவரான மாதரிக்கும் வ.கலியமூர்த்தி என்பவருக்கும் 10.5.1959ஆம் நாள் [[மயிலை சிவ. முத்து]] தலைமையில் திருமணம் நடைபெற்றது.
== விருதுகளும், பட்டங்களும் ==
* பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கியுள்ளார்.
* மேலும் 'கவிஞரேறு', 'பாவலர் மணி' முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
* கவிஞரேறு வாணிதாசனுடைய தமிழ்த்தொண்டைப் பாராட்டித் தமிழக அரசு, இவர் குடும்பத்துக்கு 10000 ரூ பரிசு வழங்கியுள்ளது.
* இவர் பெயரால் சேலியமேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
* வாணிதாசனின் கவிதை வளத்தையும் உள்ளத்தையும் அறிந்தே [[திரு. வி. க.]] 'திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்', என்றார். மயிலை சிவமுத்து, 'தமிழ்நாட்டுத் தாகூர்' வாணிதாசனார் என்று புகழ்ந்தார்.
* தமிழ்நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
 
== புகழ்பெற்ற நூல்கள் ==
* பாரதிதாசன் அடியொட்டிப் பாடிய கவிஞர்களை அக்காலத்தே வெளிவந்த 'பொன்னி' இதழ், 'பாரதிதாசன் பரம்பரை' என்னும் தலைப்பிட்டு அறிமுகப்படுத்தியது. பாரதிதாசன் பரம்பரையினருள் வாணிதாசன் குறிப்பிடத்தக்கவர்.
* "தமிழச்சி", "கொடிமுல்லை" ஆகிய சிறு காப்பியங்களையும்
* தொடுவானம்', 'எழிலொவியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார். எனினும் 'வாணிதாசன் கவிதைகள்' என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.
* இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம்.
தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகியவை இவரது நூல்களுள் சிலவாகும்.
 
== கவிஞர் வாணிதாசன் எழுதிய நூல்கள் ==
# [[இரவு வரவில்லை (நூல்)|இரவு வரவில்லை]]
#இன்ப இலக்கியம்
#இனிக்கும் பாட்டு
#எழில் விருத்தம்
#எழிலோவியம்
#குழந்தை இலக்கியம்
#கொடி முல்லை
#சிரித்த நுணா
#தமிழச்சி
#தீர்த்த யாத்திரை
#தொடுவானம்
#பாட்டரங்கப் பாடல்கள்
#பாட்டு பிறக்குமடா
#பெரிய இடத்துச் செய்தி
#பொங்கற்பரிசு
#[[வாணிதாசன் கவிதைகள் தொகுதி 1 (நூல்)|வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி]]
#வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
#வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
#விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ
 
<center><big>'''விரிவாக்கம்'''</big></center>
 
* இவர் வில்லியனூர் பள்ளியில் பயின்றார். அங்கு பாரதிதாசன், எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர் ஆசிரியராக இருந்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழும் பிரெஞ்சும் கற்றார். பள்ளி இறுதித் தேர்வில் புதுவையில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
 
* 1937 முதல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். தமிழார்வத்தால் கவிதை எழுதத் தொடங்கினார். பாரதியின் நினைவு நாளையொட்டி இவர் இயற்றிய ‘பாரதி நாள் இன்றடா’ என்ற இவரது முதல் கவிதை, ‘தமிழன்’ நாளிதழில் வெளிவந்தது.
 
* இவரது கவிதைகளை வெளியிட்டுவந்த ‘தமிழன்’ இதழாசிரியர் இவருக்கு ‘வாணிதாசன்’ என்று பெயர் சூட்டினார். பாரதிதாசனோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1945-ல் சென்னையில் வித்வான் பட்டம் பெற்றார். புதுச்சேரி திரும்பிய இவர், அங்கு கல்வே கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
 
* பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார். பிரான்ஸ் நாடு இவருக்கு ‘செவாலியர்’ விருது வழங்கியது.
 
* இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. தனிப்பாடல்கள் எழுதுவதோடு இல்லாமல் குறுங்காப்பியங்களையும் படைக்கத் தொடங்கினார். ‘தமிழச்சி கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ ஆகிய குறுங்காப்பிய நூல்கள் வெளிவந்தன. இசைப்பாடல்களின் தொகுப்பான ‘தொடுவான’த்தில் தனது இசைஞானத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
 
* திரு.வி.க. இந்நூலுக்கு முன்னுரை எழுதினார். 1956-ல் வெளிவந்த இவரது 88 பாடல்கள் அடங்கிய ‘வாணிதாசன் கவிதைகள்’ இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. இந்நூல் இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, தமிழ், பூக்காடு, இசைக்குரியார் உள்ளிட்ட 7 தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
 
*பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு ‘பொங்கல் பரிசு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ‘தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி’, ‘தீர்த்த யாத்திரை’, ‘இன்ப இலக்கியம்’, ‘எழிலோவியம்’, ‘குழந்தை இலக்கியம்’, ‘பெரிய இடத்துச் செய்தி’, ‘சிரித்த நுணா’, ‘இரவு வரவில்லை’ என ஏராளமான நூல்கள் எழுதினார்.
 
* ஏராளமான பாட்டு அரங்கங்களில் இவர் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘பாட்டரங்கப் பாடல்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இயற்கை குறித்தும் நிறைய எழுதினார். இதனால் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி, புதுமைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.
 
* இவரது கவிதைகள் உருது, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது. இறுதிவரை இலக்கியத் தொண்டாற்றி வந்த வாணிதாசன் 1974-ம் ஆண்டு தமது 59-வது வயதில் மறைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Gowtham_Sampath/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது