பயனர்:Gowtham Sampath/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3199891 by Gowtham Sampath (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Blanking Undo
சிNo edit summary
வரிசை 1:
<center><big>'''பாரதியார்'''</big></center>
[[படிமம்:Subramanya Bharathi.jpg|130px]]
*'''இயற்பெயர்''':'''சி. சுப்பிரமணியம்''' (எ) '''சுப்பையா'''
*'''பிறப்பு''': திசம்பர் 11 1882 - செப்டெம்பர் 11, 1921)
*'''பெற்றோர்''': சின்னசாமி ஐயர், இலச்சுமி அம்மாள்
*'''பிறந்த ஊர்''': [[எட்டயபுரம்]], [[தூத்துக்குடி மாவட்டம்]],
*'''புனைப்பெயர்கள்''':காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஓர் உத்தம தேசாபிமானி, நித்ய தீரர், ஷெல்லி தாசன், முந்தாசு கவிஞர், மகாகவி
*'''சிறப்புப்பெயர்கள்''':* புதுக்கவிதையின் முன்னோடி
* பைந்தமிழ் தேர்பாகன் (பாவேந்தர்)
* சிந்துக்குத் தந்தை (பாவேந்தர்)
* நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா (பாவேந்தர்)
* காடு கமழும் கற்பூரச் சொற்கோ (பாவேந்தர்)
* பாட்டுக்கொரு புதல்வன் பாரதி (கவிமணி)
* தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
* தேசிய கவி
* விடுதலை கவி
* அமரக் கவி
* முன்னறி புதல்வன்
* மகாகவி
* உலககவி
* தமிழ்க் கவி
* மக்கள் கவிஞர்
* வரகவி
*'''உரைநடை நூல்கள்''': சந்திரகையின் கதை, தராசு
* '''நடத்திய இதழ்கள்''': *இவர் '''இந்தியா, விஜயா''' முதலிய இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டார்.
* இவர் சுதேசமித்ரன், சக்கரவர்த்திணி, சூரியோதையம், கர்மயோகி போன்ற தமிழ் இதழ்களிலும், பாலபாரத யங் இந்தியா என்ற ஆங்கில இதழ்களிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
 
 
{{Infobox person
| honorific_prefix = மகாகவி
| name = சி. சுப்பிரமணிய பாரதியார்
| honorific_suffix =
| image =
| image_size =
| alt =
| caption =
| birth_name = சுப்பையா (எ) சுப்பிரமணியன்
| birth_date = {{birth date|1882|12|11}}
| birth_place = [[எட்டயபுரம்]], [[தூத்துக்குடி மாவட்டம்]], {{flagicon|IND}} [[இந்தியா]]
| death_date = {{death date and age|1921|9|11|1882|12|11}}
| death_place = [[சென்னை]], [[இந்தியா]]
| death_cause =
| resting_place =
| resting_place_coordinates =
| monuments =
| residence = [[திருவல்லிக்கேணி]]
| nationality = [[இந்தியா]]
|other_names = பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்
| alma_mater =
| occupation = [[செய்தியாளர்]]
| agent =
| known_for = கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
| notable_works = பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல.
| style =
| influences =
| influenced = [[பாரதிதாசன்]]
| home_town =
| movement = [[இந்திய விடுதலை இயக்கம்]]
| religion = [[இந்து சமயம்]]
| spouse = செல்லம்மாள்
| children = தங்கம்மாள் (பி: 1904)<br />சகுந்தலா (பி: 1908)
| parents = சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் /இலச்சுமி அம்மாள்
| signature = Subramanya Bharathi Signature.jpg
}}
'''சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி''' (''Subramania Bharati'', திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், [[எழுத்தாளர்]], பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் '''பாரதியார்''' என்றும் '''மகாகவி''' என்றும் அழைக்கின்றனர்.
 
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். [[தமிழ்]], [[தமிழர்]] நலன், [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை]], பெண் விடுதலை, [[சாதி]] மறுப்பு, பல்வேறு [[சமயம்|சமயங்கள்]] குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். [[எட்டப்ப நாயக்கர்]] மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, ''கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி'' என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை ''சிந்துக்குத் தந்தை'', ''செந்தமிழ்த் தேனீ'', ''புதிய அறம் பாட வந்த அறிஞர்'', ''மறம் பாட வந்த மறவன்'' என்றெல்லாம் [[பாரதிதாசன்]] இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் ''இந்தியா'', ''விஜயா'' முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு
வித்திட்டவர்.
 
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். [[பால கங்காதர திலகர்]], [[உ. வே. சாமிநாதையர்]], [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]], மகான் [[அரவிந்தர்]] முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் [[விவேகானந்தர்|விவேகானந்தரின்]] சீடரான, சகோதரி [[நிவேதிதா|நிவேதிதையை]] தமது குருவாகக் கருதினார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
'''சின்னசாமி''' ஐயர் '''இலக்குமி''' அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள (அன்றைய [[திருநெல்வேலி மாவட்டம்]]) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
 
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். [[1897]] ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். [[1898]] ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து [[காசி]]க்குச் சென்றார். 1898 முதல் [[1902]] வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், [[1904]] ஆம் ஆண்டு [[மதுரை]]யில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் [[சேதுபதி மேல்நிலைப் பள்ளி]]யில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
 
பாரதி [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[இந்தி]], [[சமசுகிருதம்]], [[வங்காள மொழி]] ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.
 
== இலக்கியப் பணி ==
[[படிமம்:பாரதி, அபூர்வ புகைப்படம்.JPG|thumb|268x268px|பாரதியாரின் அபூர்வ புகைப்படம்]]
''கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,<br /> வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி'' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;- பாரதி.
 
''நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
''இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;- பாரதி.
 
தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். [[சமசுகிருதம்|சமற்கிருதம்]], [[வங்காள மொழி|வங்காளம்]], [[இந்தி]], [[பிரெஞ்சு மொழி|பிரான்சியம்]], [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
 
{{cquote|தேடிச் சோறு நிதந் தின்று
:பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
:மனம் வாடித் துன்பமிக உழன்று
:பிறர் வாடப் பல செயல்கள் செய்து
:நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
:கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
:பல வேடிக்கை மனிதரைப் போலே
:நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?}}
 
=== பாஞ்சாலி சபதம் ===
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் [[பாஞ்சாலி சபதம்]]. அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
 
== இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும் ==
பாரதியார், முதலில் [[நவம்பர்]] 1904 முதல் [[ஆகஸ்ட்]] [[1906]] வரை [[சுதேசமித்திரன்|சுதேசமித்திரனில்]] உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து [[1920]] முதல் [[செப்டம்பர்]] 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். [[சக்கரவர்த்தினி (இதழ்)|சக்கரவர்த்தினி]] என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), [[இந்தியா (இதழ்)|இந்தியா]] என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, [[புதுச்சேரி]]: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.
 
=== தடை செய்யப்பட்ட புத்தகங்கள் ===
பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]]த்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . [[சத்தியமூர்த்தி|தீரர் சத்திய மூர்த்தி]] உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.
 
== தேசியக் கவி ==
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். ''மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே'' என்று எழுதியவர்.
 
தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், ''பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்'' என்றார். ''வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும்'' நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
 
== புதுக்கவிதைப் புலவன் ==
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் ஒரு அறிவு சார்ந்த புதுக்கவிதை இவர் தொகுப்பில் இருக்கும். அதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் தான் பாப்பா பாட்டு என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை.
 
== பாரதியும் சோவியத் ஒன்றியமும் ==
1905ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:
 
{{cquote|"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின்
:பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும்
"உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள்
செலுத்துவாராக”}}
 
இச்சம்பவம் நடந்த 12ஆண்டுகளுக்குப் பின்னர் 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையை பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:
 
{{cquote|“மாகாளி பராசக்தி உருசிய நாட்
:டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
:ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
:கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”}}
 
== பெண்ணுரிமைப் போராளி ==
'''பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே''' எனப் பெண்ணுரிமையை ஏத்தினார்.
"போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்"
என்ற பாரதி ''பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா'' என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.
 
== பாரதியார் நினைவுச் சின்னங்கள் ==
[[தமிழ்நாடு அரசு]] மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக [[எட்டயபுரம்|எட்டயபுரத்தில்]] அவர் வாழ்ந்த இல்லம், [[சென்னை]] [[திருவல்லிக்கேணி]]யில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
 
== படைப்புகள் ==
{{columns-list|colwidth=20em|
# குயில் பாட்டு
# [[கண்ணன் பாட்டு]]
# பாப்பா‌ பாட்டு
#[[சுயசரிதை (பாரதியார்)]]
# [[தேசிய கீதங்கள்]]
# [[பாரதி அறுபத்தாறு]]
# [[ஞானப் பாடல்கள்]]
# [[தோத்திரப் பாடல்கள்]]
# [[விடுதலைப் பாடல்கள்]]
# [[விநாயகர் நான்மணிமாலை]]
# [[பாரதியார் பகவத் கீதை (பேருரை)]]
# [[பதஞ்சலியோக சூத்திரம்]]
# [[நவதந்திரக்கதைகள்]]
# [[உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு]]
# [[ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)]]
# சின்னஞ்சிறு கிளியே
# [[ஞான ரதம்]]
# [[பகவத் கீதை]]
# [[சந்திரிகையின் கதை]]
# [[பாஞ்சாலி சபதம்]]
# [[புதிய ஆத்திசூடி]]
# [[பொன் வால் நரி]]
# [[ஆறில் ஒரு பங்கு]]
}}
 
== மறைவு ==
1921 ஆம் ஆண்டு சூலை மாதம் [[திருவல்லிக்கேணி]], [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்|பார்த்தசாரதி கோவில்]] யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 இல் செப்டம்பர் 11 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார். அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் [[திருவல்லிகேணி]]யில் உள்ளது.
 
== பாரதியாரின் உறவினர்கள் ==
*சி. விசுவநாத ஐயர் பாரதியாரின் ஒன்று விட்ட தம்பி. இவர் [[மானாமதுரை]] பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Gowtham_Sampath/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது