[[படிமம்:Medieval writing desk.jpg|thumb|250px|எழுதுவதைக் காட்டும் ஒரு படம்]]
'''எழுத்து''' அல்லது '''எழுதுதல்''' (''writing'') என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி [[மொழி]]யை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக்[[குறியீடு]]களின் தொகுதி [[எழுத்து முறைமை]] எனப்படுகிறது. இது, [[வரைதல்]]கள், [[ஓவியம்|ஓவியங்கள்]] போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமுகி.மு. நான்காம் நூற்றாண்டளவில் [[மெசொப்பொத்தேமியா]]வில் [[வணிகம்|வணிகத்தினதும்]], [[நிர்வாகம்|நிர்வாகத்தினதும்]] சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.<ref name="Robinson, 2003, p. 36">Robinson, 2003, p. 36</ref> பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள்எழுத்துகள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களேஎழுத்துகளே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிறல் ஒலி. மாடுகளை அதட்டி ஓட்டும் ஒலி).