ஏராளமான பாவகீதங்களைத் தவிர, இவர் பல திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். பெரிய வெற்றி பெற்றத் திரைப்படமான "[[குரிடிபே|குரி]]" என்ற படத்தில் இடம்பெற்ற ''தங்காலியண்ட்டே பாலாலி பண்ட்டே'' என்ற பாடலை [[ராஜ்குமார்|ராஜ்குமாருடன்]] இணைந்து இவர் திரைப்பட பாடலை பாடி அறிமுகமானார். பின்னர் [[எல். வைத்தியநாதன்]], [[சி. அஸ்வத்]], எம் ரங்கா ராவ், [[விஜய பாஸ்கர்]], இராஜன்-நாகேந்திரா, [[அம்சலேகா]] போன்ற பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். ''"எலு சுட்டின கோட்டே"'' திரைப்படத்தில் [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ். பி. பாலசுப்பிரமணியத்துடன்]] இணைந்து "''சந்தச அரலுவ சமயா''" என்ற பாடலையும், ''எஸ்.பி சாங்லியானா பாகம் 2'' திரைப்படத்தில் "''மேரு கிரியானே நீலி கடலானே''" என்ற பாடலை [[கே. ஜே. யேசுதாஸ்|கே. ஜே. யேசுதாஸுடனும்]], [[மைசூர் மல்லிகே (திரைப்படம்)|மைசூர் மல்லிகே]] திரைப்படத்திலிருந்து, "''ராயரு பந்தரு மாவன மனகே''", "''யாவ மோகன முரளி கரயிது''" என்ற இரு பாடலையும், ''நாகமண்டலா'' திரைப்படத்திலிருந்து "''கெடியா பேக்கு மகளா''", ""ஹுடுகி ஹோ ஹுடுகி''" என்ற இரு பாடலையும் பாடியிருந்தார்.