பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 106:
ஏப்ரில் 2020- ஒரு நாளில் பதிவிடப்பட்ட அதிக நோயாளிகளும், மரணங்களும் ஐக்கிய அமெரிக்காவில் பதிவிடப்பட்டது. உலகம் முழுவதும் 213 நாடுகளில் இந்நோய் பரவியிருந்தது.
கோவிட்-19இன் ஆரம்ப நோயாளிகளில் பலர் ஹுணான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் இந்த சந்தைக்கு அதிகம் சென்றுள்ளனர். சந்தையிலிருந்து பெறப்பட்ட சூழலியல் மாதிரிகளிலும் கோவிட்-19 வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் மூலம் கோவிட்-19 தொற்று இச்சந்தையில் தொடங்கியிருக்கலாம் அல்லது இச்சந்தை ஒரு அதிதீவிரப் பரவலுக்கான மையப்புள்ளியாகச் செயற்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. அந்த சந்தைக்கு வெளிநபரொருவராலா அல்லது விலங்கொன்றாலா பரவியது எனக் கண்டறியப்படவில்லை. எனினும் அந்த சந்தை இதன் பின்னர் மூடப்பட்டது.
தருஷி: தனிமைப்படுத்தல் முறைமைகள் சீனாவில் வினைத்திறனாக இருந்தனவா? அப்படி இருந்திருந்தால் எப்படி ஏனைய நாடுகளுக்குத் தொற்று பரவியிருக்க முடியும்?
சந்தமினி: தனிமைப்படுத்தல் மூலம் மார்ச் மாதமளவில் சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் சீனாவுக்கு வெளியில் அதற்கிடையில் அதிதீவிரமாகப் பரவத்தொடங்கிவிட்டது. சீனாவுக்கு வெளியில் ஐரோப்பா பரவலின் மையப்புள்ளியாக மாறிவிட்டது. சீனாவை விட இத்தாலியில் பாதிப்பு அதிகமாக இருந்தது.
தருஷி: இத்தாலி, சீனா இரண்டும் வளர்ச்சியடைந்த நாடுகள் அல்லவா? அப்படியிருக்கையில் எவ்வாறு இத்தாலியில் அதிக் பாதிப்பு?
சந்தமினி: அதற்கு பல காரணங்கள் உள்ளன. பிந்திய எதிர்வினை, குறைவான சோதனைத் திறன், முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல், சமூக நடத்தை ஆகிய முக்கிய காரணங்களாகும்.
தருஷி: கொரோனா வைரஸ் எவ்வாறு மக்களிடையே அவ்வளவு இலகுவாக ப்ரவுகின்றது?
சந்தமினி: என்னுடன் படிக்கும் நண்பர் ஒருவர் இது தொடர்பாக ந்ல்ல பதிவொன்றை அனுப்பியிருந்தார். அதை உனக்கு அனுப்புகின்றேன். பார்.
தருஷி: எப்படி இந்த வைரஸ் எமது ஆரோக்கியமான கலங்களுக்குள் நுழைகின்றது?
சந்தமினி: வைரஸ்கள் எமது கலங்களின் கலமென்சவ்வுகளிலுள்ள வாங்கிகளுடன் இணைவதன் மூலம் உள்நுழைகின்றன. எனினும் அவ்வாங்கிகள் வைரஸுகளுக்காக இருப்பவை அல்ல. அவை வேறு தேவைகளுக்காக இருக்கும் வாங்கிகள். எனினும் அவற்றை வைரஸ்கள் தமது தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
தருஷி: தொற்றுக்குள்ளாகும் அனைவருக்கும் நோயேற்படவேண்டுமென்றில்லை என்று கூறுகின்றார்களே. சிலருக்கு மற்றவர்களை விட தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதா?
சந்தமினி:
|