பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 73:
சந்தமினி: மரபணுத் தொகுப்பென்றால் ஒரு அங்கியில் இருக்கும் மொத்த மரபணுத் தகவல்களை ஒருமித்து கூறும் சொல்லாகும். இதுவரை மனிதர்களில் நோய்களை ஏற்படுத்தும் 6 கொரோனா வைரஸ் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 4 இனங்கள் மனிதரில் மட்டுமுள்ளவை.SARS, MERS பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றாயா?
தருஷி: ஆம். அவை பெருந்தொற்றுக்கள் அல்லவா? SARS என்றால்
சந்தமினி: ஆம். மிகச்சரி. அவையும் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்படுபவையே.
வரிசை 127:
தருஷி: தொற்றுக்குள்ளாகும் அனைவருக்கும் நோயேற்படவேண்டுமென்றில்லை என்று கூறுகின்றார்களே. சிலருக்கு மற்றவர்களை விட தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதா?
சந்தமினி: கோவிட்-19ஆல் எந்த வயதுக்குரியவரும் பாதிக்கப்படலாம். ஆனால் அதிகளவானோர் நோயறிகுறி எதனையும் வெளிக்காட்டுவதில்லை. சிலருக்கு நோயின் வீரியம் அதிகமாக உள்ளது. இது தொடர்பான சில ஆபத்துக் காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன. நீண்டகால நோய்களைக் கொண்டுள்ளோரும், வயதில் முதிர்ந்தோரும் ஏனையோரை விட கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளனர். நோயறிகுறியற்றோருக்கு உயிராபத்து எதுவும் இல்லாவிட்டாலும், நோய் பரவலுக்கு அவர்களும் பெரியளவு பங்களிப்பை வழங்குகின்றனர்.
தருஷி: கோவிட்-19 ஒரு சுவாச நோய் தானே? அதாவது தடிமன் போன்றதல்லவா? ஏன் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்?
சந்தமினி: இரண்டு நோய்களும் பொதுவான அறிகுறிகள் சிலவற்றைக் கொண்டுள்ளதால், இரண்டையும் வேறுபடுத்துவது சிறிது கடினம் தான். ஆனால் கோவிட்-19 சாதாரண தடிமனை விட மிகவும் ஆபத்தானது. அத்துடன் இரண்டும் ஒன்றென்று எம்மால் கூறிவிட முடியாது.
தருஷி: எனவே எனக்கு இருமலும், தடிமனும் இருந்தால், எனக்கு கொரோனா இருக்குமா என்று எப்படி ஊகிக்க முடியும்?
சந்தமினி: ஐயோ, அதிகம் யோசிக்க வேண்டாம். இந்த கட்டுரையை வாசி. இதில் கோவிட்-19இன் அறிகுறிகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
தருஷி: அப்படியென்றால் கோவிட்-19 சுவாசத்தொகுதியை மட்டும் தான் பாதிக்கும். இல்லையா?
சந்தமினி: இல்லை தருஷி. அது பிரதானமாக சுவாசத்தொகுதியைப் பாதித்தாலும், அது எமது உடலின் ஏனைய பாகங்களான குருதிக்குழாய்கள், இதயம், மூளை, ஈரல், சிறுநீரகம் என பல பாகங்களையும் பாதிக்கக்கூடியது.
தருஷி: மிக்க நன்றி நண்பியே! இந்த உலகளாவிய பெருந்தொற்று பற்றிய பல சந்தேகங்களைத் தீர்த்துவிட்டாய். இதைப் பற்றி எத்தனையோ வதந்திகள் உலாவுவதால் உண்மையையும், வதந்தியையும் வேறுபடுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
சந்தமினி: நான் முன்னர் சொன்னது போலவே நம்பிக்கையான மூலங்களை மட்டும் பார், ஊடகங்கள் கூறும் அனைத்தையும் அப்படியே நம்பி விடாதே. தேவையற்ற பயம் இந்த பெருந்தொற்றை விட ஆபத்தானது.
உங்களுக்குத் தெரியுமா (Did you know?)
1. டிசெம்பர் 2019இல் சீனாவில் புதிய நியூமோனியா தொற்று ஒன்று பரவியது. இது முன்னர் அறியப்படாத புதிய வகை நோய்க்காரணியால் பரவியுள்ளது. ஜனவரி 2020இல் இதனை உலக பொதுச்சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இது மனிதர்களில் நோயை உண்டாக்கக்கூடிய ஏழாவது வகை கொரோனா வைரஸாகப் பதிவிடப்பட்டது. இந்த புதிய கொரோனா வைரஸை SARS-CoV-2 (Severe Acute Respiratory Syndrome) எனப் பெயரிட்டார்கள். இந்த வைரஸால் ஏற்படுத்தப்படும் நோயை கோவிட்-19 (COVID-19: Coronavirus Disease-2019) எனப் பெயரிட்டார்கள்.
2. SARS-CoV-2 இன் மரபணுத்தொகையானது, SARS-CoV உடன் 79.5%இலும், MERS உடன் 40%இலும் ஒத்துப்போவதாக, இதன் மரபணுத்தொகையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மரபணு வரிசை தரவுகளின் படி வௌவால்கள் இவ்வைரஸின் மூலமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
3. SARS-CoV-2 வைரஸானது தனது ஸ்பைக் புரதங்கள் மூலம் விருந்துவழங்கிக் கலங்களின் வாங்கிகளுடன் இணைந்துகொள்கின்றது. இதுவரை நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் படி இவ்வைரஸ் மனிதர்களின் ACE-2 (Angiotensin Converting Enzyme-2) வாங்கியுடன் இணைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கலங்களினுள் செல்லும் வைரஸ் கலங்களினுள் பிரிந்து பெருகத் தொடங்கி விடும். தொற்று ஏற்பட்டு 4-5 நாட்களில் தொண்டையில் உள்ள வைரஸின் அளவு உச்சத்தைத் தொடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
|