ஐந்தாம்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 18:
| budget =
}}
'''ஐந்தாம் படை''' (''Ainthaam Padai'') என்பது 20009 ஆண்டு வெளியான [[தமிழ்]] [[அதிரடித் திரைப்படம்|அதிரடி திரைப்படம்]] ஆகும். [[சுந்தர் சி.]]. [[சிம்ரன்]], [[முகேஷ் (நடிகர்)|முகேஷ்]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[நாசர் (நடிகர்)|நாசர்]] ஆகியோர் நடித்த இப்படம் 23 சூலை 2009 அன்று வெளியானது. இப்படத்தை சுந்தரின் மனைவி [[குஷ்பூ]] தயாரித்தார். இந்த படம் வணிக ரீதியாக சராசரிக்கும் கீழே வசூல் ஈட்டியதுதுஈட்டியது. <ref>https://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/aintham-padai.html</ref> <ref>https://www.sify.com/movies/boxoffice.php?id=plupq3fbecheh{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
== கதை ==
 
இந்த படம் இரண்டு வெவ்வேறு குடும்பங்களுக்கு இடையிலான மோதல்களையும் அண்ணன் தம்பிமார்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் பற்றியது.
 
எதிரிக் குடும்பத்தின் உறவுமகளான தேவசேனாவை (சிம்ரன்) அறிமுகப்படுத்துவதில் இருந்து படத்தின் கதை முன்னோக்கி செல்கிறது. ஆனால், குணசேகரன் (நாசர்) இந்த குடும்பப் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் நோக்கில் அவரது மூத்த தம்பியான கருணாகரனுக்கும் (முகேஷ்) தேவசேனாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார். ஆயினும், தேவசேனா அவளது மணமகன் பிரபாகரன் (சுந்தர் சி) தான் என தவறுதலாக எண்ணி விடுகிறாள். அவளுக்கு திருமணம் நடக்கப்போகும் நேரத்தில் மணமகன் பிரபாகரனின் அண்ணன் தான் எனத் தெரிய வர, அவள் பிரபாகரனின் காலில் விழுந்து அவளின் திருமண மறுப்பைக் கூறி கெஞ்சுகிறாள். இருந்தும், பிரபாகரன் தேவசேனாவை கட்டாயப்படுத்தி அவனது அண்ணன் கருணாகரனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அதன் காரணமாக, தேவசேனா பிரபாகரனை அவனின் குடும்பத்தை விட்டு பிரிப்பதாக அவனுக்கு சவால் விடுகிறாள்.
 
தேவசேனா அவளது திருமணத்திற்கு பின்பு அவளது கணவர் கருணாகரனுடன் சேர்ந்து வாழ்க்கையை துவங்காமல் பிரபாகரனை பழிவாங்க திட்டம் திட்டுகிறாள். பிரபாகரனும் காயத்திரியும் (அதிதி சௌத்ரி) காதலிப்பதை அறிந்த தேவசேனா அந்த காதலை தோல்வியடையச் செய்ய நினைக்கிறாள். அதற்காக அவள் அவளது பெரிய தந்தையான தனுஷ்கோடியின் (தோதன்னா) உதவியை நாடுகிறாள். தனுஷ்கோடி காயத்திரியின் தந்தையை கடத்தி அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி அவனின் கடைசி மகனான பன்னீர்க்கு (ஆர்யன்) காயத்திரியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயல்கிறான். பிரபாகரனிடமும் அவனது அண்ணன்களிடமும் காயத்திரி அவளது மனப்பூர்வத்துடன் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதிப்பதாக பொய் கூறுகிறாள். இதனால் சந்தோசமடைந்த தேவசேனா பிரபாகரனை மென்மேலும் பழிவாங்குவதாக அவனிடம் சவால் விடுகிறாள்.
 
பிரபாகரனுக்கு கடந்தகால நினைவுகள் சில முன்வந்து செல்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, குணசேகரனுக்கும் அவரது காதலியான கல்பனாவிற்கும் (தேவயாணி) திருமணம் செய்ய நிச்சயிக்கப்படுகிறது. அந்நேரம் அந்த ஊரில் கள்ளச்சாராய பாவனையின் காரணமாக சில ஆண்மக்கள் இறந்துவிட்டனர். அந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் தனுஷ்கோடி மற்றும் அவரது மூத்த மகனான ராஜதுரை (ராஜ்கபூர்) எனத் தெரியவந்தது. அப்போது அவ்வூரின் மகளிர் மன்றத் தலைவியாக இருந்த கல்பனா அவளது குழுவுடன் அந்த மோசடியை தடுக்க சென்றபோது அங்கே பிரபாகரனுக்கும் ராஜதுரைக்கும் இடையே சண்டை நிலவுகிறது. தனுஷ்கோடி ஊர்க் கலவரங்களை ஏற்படுத்த பிரச்சினைகள் தீவிரமடைந்து, ராஜதுரையின் மீது கொடுக்கப்பட்ட புகாரை கல்பனாவின் குழுவுடனான பேச்சுவார்த்தையினது சுமூகமான முடிவில் இரத்து செய்தனர். இதனால் தனுஷ்கோடி மற்றும் குணசேகரன் குடும்பத்துக்கு இடையில் பகை ஆரம்பித்தது.
 
தனுஷ்கோடி வேறு ஊருக்கு சென்று சாராயம் தயாரிப்பதற்கு யோசனை கூற, ராஜதுரை அதனை மறுத்து கல்பனாவை அவளின் வாழ்நாள் முழுவதும் பழிவாங்க வேண்டுமென திட்டம் போடத் துவங்கினான்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்தாம்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது