ஐந்தாம்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
தேவசேனா அவளது கல்யாணத்திற்கு பின்பு அவளது கணவர் கருணாகரனுடன் சேர்ந்து வாழ்க்கையை துவங்காமல் பிரபாகரனை பழிவாங்க திட்டம் திட்டுகிறாள். பிரபாகரனும் காயத்திரியும் ([[ஆதித் சௌத்ரி]]) காதலிப்பதை அறிந்த தேவசேனா அந்த காதலை தோல்வியடையச் செய்ய நினைக்கிறாள். அதற்காக அவள் அவளது பெரிய தந்தையான தனுஷ்கோடியின் ([[தோதன்னா]]) உதவியை நாடுகிறாள். தனுஷ்கோடி காயத்திரியின் தந்தையை கடத்தி அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி அவனின் கடைசி மகனான பன்னீர்க்கு ([[ஆரியன் (நடிகர்)|ஆர்யன்]]) காயத்திரியை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முயல்கிறான். பிரபாகரனிடமும் அவனது அண்ணன்களிடமும் காயத்திரி அவளது மனப்பூர்வத்துடன் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதிப்பதாக பொய் கூறுகிறாள். இதனால் சந்தோசமடைந்த தேவசேனா பிரபாகரனை மென்மேலும் பழிவாங்குவதாக அவனிடம் சவால் விடுகிறாள்.
 
பிரபாகரனுக்கு கடந்தகால நினைவுகள் சில முன்வந்து செல்கிறது. சிலஆறு வருடங்களுக்கு முன்பு, குணசேகரனுக்கும் அவரது காதலியான கல்பனாவிற்கும் ([[தேவயானி (நடிகை)|தேவயாணி]]) கல்யாணம் பண்ணி வைக்க நிச்சயிக்கப்படுகிறது. அந்நேரம் அந்த ஊரில் கள்ளச்சாராய பாவனையின் காரணமாக சில ஆண்மக்கள் இறந்துவிட்டனர். அந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் தனுஷ்கோடி மற்றும் அவரது மூத்த மகனான ராஜதுரை ([[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]]) எனத் தெரியவந்தது. அப்போது அவ்வூரின் மகளிர் மன்றத் தலைவியாக இருந்த கல்பனா அவளது குழுவுடன் அந்த மோசடியை தடுக்க சென்றபோது அங்கே பிரபாகரனுக்கும் ராஜதுரைக்கும் இடையே சண்டை நிலவுகிறது. தனுஷ்கோடி ஊர்க் கலவரங்களை ஏற்படுத்த பிரச்சினைகள் தீவிரமடைந்து, ராஜதுரையின் மீது கொடுக்கப்பட்ட புகாரை கல்பனாவின் குழுவுடனான பேச்சுவார்த்தையினது சுமூகமான முடிவில் இரத்து செய்தனர். இதனால் தனுஷ்கோடி மற்றும் குணசேகரன் குடும்பத்துக்கு இடையில் பகை ஆரம்பித்தது.
 
தனுஷ்கோடி வேறு ஊருக்கு சென்று சாராயம் தயாரிப்பதற்கு யோசனை கூற, ராஜதுரை அதனை மறுத்து கல்பனாவை அவளின் வாழ்நாள் முழுவதும் பழிவாங்க வேண்டுமென திட்டம் போடத் துவங்கினான். மறுநாள் காலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதன் படி குணசேகரனதும் கல்பனாவினதும் கல்யாண ஏற்பாடுகள் கோவிலின் மண்டபத்திற்குள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. கல்பனா கல்யாணத்திற்கு தயாராக மணமேடையில் மாலையுடன் அமர்ந்து கொண்டு சடங்குகளை செய்து கொண்டிருக்கும் போது அங்கே ராஜதுரை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வருகிறான். ராஜதுரை சரியாக கல்பனாவிற்கு முன்னால் நின்று அவனது வேடத்தை கலைக்க, அவன் கையில் [[wikt:தாலி|தாலிக்கயிறு]] வைத்திருப்பதை கல்பனா காண்கிறாள். அங்கு என்ன நடக்கிறது என கல்பனா யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ராஜதுரை அவளின் கழுத்தில் தாலி கட்ட முயற்சிக்கிறான். அவன் முடிச்சுப் போட துவங்க முன்பாக கல்பனா அவனைத் தள்ளிவிட்டு கோவிலை விட்டு ஓடிவிடுகிறாள். ராஜதுரையைத் தடுக்க குணசேகரன் உட்பட சிலர் முற்பட்ட போதிலும், அவன் அவர்களை தாக்கிவிட்டு கல்பனாவை துரத்த ஆரம்பித்தான். கல்பனா எவ்வளவு தூரம் ஓடிய போதிலும், ராஜதுரை அவளை ஒரு வீதித்தடை அருகே மடக்கிப் பிடித்துவிட்டான். தன்னை கட்டாயக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாமென கல்பனா எவ்வளவோ கெஞ்சி அழுத போதிலும், ராஜதுரை அதைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தடுக்க வந்த அவளின் அம்மாவையும் கீழே தள்ளிவிட்டு கல்பனாவின் கழுத்தில் வலுக்கட்டாயமாகத் தாலி கட்டத் துவங்கினான். கல்பனா எவ்வளவோ முயன்றும் அவளால் ராஜதுரையின் பிடியிலிருந்து விலக முடியவில்லை. ராஜதுரை கல்பனாவின் கழுத்தில் தாலி கட்டி முடித்துவிட்டு குணசேகரனை தாக்க முயல்கிறான். கல்பனா அதிர்ச்சியடைந்து அவளின் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை கைகளில் ஏந்திக்கொண்டு அதைப் பார்த்தபடியே நிற்கிறாள். இதற்கிடையில் நடைபெற்ற சண்டையில் பிரபாகரன் தன்னை தற்காத்து கொள்ளும் முயற்சியில் ராஜதுரை இறந்துபோகிறான். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கல்பனா மனநலம் பாதிக்கப்பட்டு பைத்தியமாகிறாள். இவ்வாறாக, பிரபாகரன் அவனது கடந்தகாலத்தை தாந்தோணியிடம் ([[விவேக் (நடிகர்)|விவேக்]]) கூறி முடிக்கிறான்.
"https://ta.wikipedia.org/wiki/ஐந்தாம்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது