சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2:
'''சிற்பம்''' என்பது ஒரு [[முப்பரிமாணம்|முப்பரிமாணக்]] கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், [[கல்|கற்கள்]], [[உலோகம்]], [[மரம்]] [[மண்]] என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, [[ஒட்டுதல்]], உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் [[சூளை]]யில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்குபவர் [[சிற்பி]] எனப்படுகிறார். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிற்பக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது. ஒருவர் தன் கண்களால் கண்ட உருவங்கள் அல்லது கற்பனை உருவங்களை வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு என்ற இலக்கியம் கூறுகின்றது. கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், சலவைக் கல் ஆகியவையும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஆகியனவும் சிற்பம் செய்ய ஏற்றனவாகக் கருதப்பட்டன. வடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களை ‘புடைப்புச் சிற்பங்கள்’ என்றும் வகைப்படுத்துவர்.<ref>http://www.thinakaran.lk/2013/09/05/?fn=f1309052{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
பண்டைய பண்பாட்டு கலாச்சாரங்களின் எச்சமாக மண்பாண்டங்களைத் தவிர்த்த ஏனைய படைப்புகள் யாவும் அழிவுற்றன.மனிதனின் படைப்புகளில் காலத்தால் அழியாமல் வாழக்கூடிய கலைப்படைப்பு சிற்பமாகும். மற்றையவை விரைவில் அழியக்கூடிய பொருட்கள் கொண்டு செய்யப்பட்டவையாகும். பழங்காலத்தில் செய்யப்பட்ட மரச்சிற்பங்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. அவை முற்றிலும் அழிந்துவிட்டன. அக்காலச் சிற்பங்களில் பிரகாசமான வண்ணம் தீட்டப்பட்டன. இவை தற்போது தேய்வுற்றும் வண்ணம் மங்கியும் காணப்படுகின்றன.<ref name="artmuseums.harvard.edu">[{{Cite web |url=http://www.artmuseums.harvard.edu/exhibitions/sackler/godsInColor.html |title="Gods in Color: Painted Sculpture of Classical Antiquity" September 2007 to January 2008, The Arthur M. Sackler Museum] |access-date=2014-05-10 |archive-date=2009-01-04 |archive-url=https://web.archive.org/web/20090104060402/http://www.artmuseums.harvard.edu/exhibitions/sackler/godsInColor.html |dead-url=dead }}</ref>
 
பல்வேறு கலாச்சாரங்களில் சிற்பங்கள் பெரும்பாலும் மத வழிபாடுகளை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. அது போன்றதொரு பெரிய சிற்பங்களை படைத்தல் என்பது தற்போதைய நூற்றாண்டு வரை ஒரு தனி நபருக்கு மிகவும் விலை உயர்ந்ததும் அதிக செலவு பிடிக்கக் கூடியதுமாகும். சிற்பங்கள் வழக்கமாக அன்றைய சமய அல்லது அரசியல்வெளிப்பாடாக இருந்தன. கலாச்சாரத்தின் எச்சமாக இன்று வரை அழியாதுள்ள சிற்பங்கள் மூலம் அக்கலாச்சாரமும் வாழ்ந்துகொண்டுள்ளன எனலாம். பண்டைய [[மத்தியத் தரைக்கடல்]] நாகரிகம், [[இந்தியா]], [[சீனா]], [[ஆப்பிரிக்கா]] மற்றும் பல தென் அமெரிக்கக் கலாச்சாரங்கள் இது போன்றே அதன் பேரளவு சிற்பங்கள் மூலம் இன்றளவும் வாழ்ந்துகொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது