கந்த சஷ்டி கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{விக்கிமூலம்|கந்த சஷ்டி கவசம்}}
'''கந்த சஷ்டி கவசம்''' என்பது [[பால தேவராயன்|பால தேவராய சுவாமிகளால்]] [[பழனி]] [[முருகன்|முருகன்மீது]] இயற்றப்பட்ட பாடலாகும். இதன் காலம் 19ஆம் நூற்றாண்டு.<ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005</ref><ref>{{cite web|url=https://www.vikatan.com/spiritual/temples/71000-the-story-of-shasti-kavasam---valayappettai-rkrishnan|title=சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! - வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்}} விகடன் (31 அக்டோபர், 2016)</ref> இதனை [[சென்னிமலை தண்டாயுதபாணி கோயில்|சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்]] அரங்கேற்றினார். [[கந்தன்|கந்த]] சஷ்டி கவசத்தில் வரும் ''சிரகிரி வேலவன்'' எனும் [[பதம்]] இத்தல இறைவனைக் குறிப்பது ஆகும்.<ref>குமுதம் ஜோதிடம்; 28.03.2008; சென்னிமலையின் திகட்டாத தேனமுதன் கட்டுரை</ref> ஶ்ரீ பால தேவராய சுவாமிகள் குமரனைப் பாடியருளியதாலும், சிவபெருமானை இடையிடையே ஏற்றத்தோடு கூறியிருப்பதாலும் சைவ சீலர், குமரக் கடவுள் பக்தியில் சிறந்தவர் என்று அறியமுடிகிறது. இவர் பாண்டிய நாட்டினராக இருக்கலாம் என்று ஊகிக்க அந்நாட்டு வழக்குகள் காணப்படுகின்றன. 'லாலா வேசம்' இது தென்பாண்டி நாட்டு வழக்குச் சொல். பாண்டிய நாட்டில் முருகர் திருத்தலங்கள் அதிகம் இருந்ததாலும், அத்தலங்களையே இவர் அதிகம் பாராட்டியிருப்பதாலும் இவர் பாண்டிய நாட்டினர் என எண்ண இடம்தருகிறது.
 
"கந்தர் சஷ்டி கவசம்" என்னும் அருட்பெரும் நூல் நம் தமிழ் நாட்டுச் சீரிய அன்பர்கள் பலராலும் கொண்டாடி போற்றப்பெரும் அழகிய நூலாகும். இது, கந்தர்+சஷ்டி+கவசம் என்னும் மூன்று சொல் இரு சந்தியலாகிய ஒரு தொடர். இதற்கு கந்தரைக் சஷ்டி திதியில் ஓதிப் பயனடையப்பெறும் கவசம் போன்ற நூல் என்பது திரண்ட பொருளாகும். இந்நூல், நம் தமிழ் நூல்களுள் சீரிதாகப் பெரிதும் நம்மவரால் பாராட்டப்படுவதொன்றாகும். இந்நூலைப் பல்லாயிரம் அன்பர்கள் பாடிப் பாராட்டித் துதித்துப் போற்றிக் குமரக்கடவுளின் அருளால் பேய், பூதம், பில்லி சூனியம், பிணி, பகை முதலியவற்றால் உண்டான பல துயரங்களையும் அகற்றி நீக்கி நிலைபெற்றுச் சுகவாழ்வில் வாழ்ந்திருக்கின்றனர்.
 
இந்த நூல் மந்திரரூபம் உடையது; மந்திராட்சரங்களும், மந்திரங்களும் பொதிந்து விளங்குவதாகும். இதனை குருமுகமாக இருந்து கேட்டுப் பயன்பெற வேண்டும். இப்பாவுள் வடமொழிக் கலப்பதிகம் அமைந்துள்ளன. மந்திரரூபப் பாககள் வடமொழி கலந்தே இருக்கும் என்பது ஒரு தலை.
 
'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் [[கவசம்]] என்பர். பிற்காலத்தில் தமிழில் வெளியிடப்பட்ட கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்நூல் பெரிதும் அறியப்படுவது ஆகும். இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/கந்த_சஷ்டி_கவசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது