கி.பி.1605ஆம் ஆண்டில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க மன்னர்களால்]] சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது.{{cn}} [[இராமநாதபுரம் சமஸ்தானம்|சேதுபதி அரசர்]] நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு <ref>http://www.thedipaar.com/listings/kachatheevu-ramanathapuram-island/{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற [[கூத்தன் சேதுபதி]] (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார்{{cn}} வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் [[முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி|முத்துராமலிங்க சேதுபதி]] மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய கம்பெனியார்]] ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம்]] ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்{{cn}}.