'''நந்த கோபன்''' அல்லது '''நந்தகோபர்''', என்பவர்தமிழ் என்பவர்வழியில் '''நந்தசேன மகாராஜா''' என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு [[யது குலம்|யதுயாதவர் குல (இடையர்)]] பிரிவை சேர்ந்த அரசர் ஆவார். [[வசுதேவர்|வசுதேவரின்]] உறவினர் தான் நந்தகோபன். வசுதேவருடைய மனைவி [[தேவகி]]யின் அண்ணனான [[கம்சன்]] வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]], [[கிருட்டிணர்]] பிறந்ததும் அவரை [[கோகுலம்]] என்ற இடத்தில் வாழ்ந்து வந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் [[பலராமர்|பலராமனையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி.<ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>