இராயக்கோட்டை (கோட்டை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2 |
சிNo edit summary |
||
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
'''இராயக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:[[:en:Rayakottai|Rayakottai]]) இது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கிருஷ்ணகிரி மாவட்டம்]],
==கோட்டை==
இவ்வூருக்கு பக்கத்தில் உள்ள மலையில் கோட்டை உள்ளது இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரமுடையது. இக்கோட்டையை தரைக்கோட்டை, மலைக்கோட்டை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மலைக்கோட்டை சிறந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டது. பலகுளங்கள், வெடிமருந்துச் சாலைகள், இடிபாடுகளுடன் கூடிய பல கட்டடங்கள் உள்ளன.
முதல் மூன்று மைசூர் போர்களிலும் இராயக்கோட்டை சிறப்பிடம் பெற்றது. [[ஐதர் அலி|ஐதர்]], [[திப்பு சுல்தான்|திப்புவிற்கும்]], ஆங்கிலேயருக்கும் இடையே பல போர்கள் நடைபெற்றுள்ளன. இக்கோட்டை திப்புவிடமிருந்து மேஜர் கௌடி என்பவரால் 20.7.1791 இல்
==தரைக்கோட்டை==
மலைக்கோட்டையில் அரச பரம்பரையினர் வாழ்ந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக தரைக்கோட்டைக் கட்டப்பட்டது. இது [[ஜெகதேவிராயர்]] காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை இந்த கோட்டை பயன்பாட்டில் இருந்தது. இப்பகுதியில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக ஆண்டுவந்தவர்கள், ஒவ்வொரு காலத்திலும், ஒரு நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தினர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1792 ஆம் ஆண்டு, மேஜர் கௌடி தலைமையில், 800 வீரர்கள் கொண்ட படை, [[திப்புசுல்தான்|திப்புசுல்தானைத்]] தாக்க வந்தது. இரண்டு நாட்கள் நடந்த சண்டைக்குப் பிறகே, இக்கோட்டையின் வடக்குப்பகுதி மதிலை, [[பீரங்கி]] கொண்டு தகர்த்தனர். அந்த அளவுக்கு இத்தரைக்கோட்டை உறுதியாக இருந்துள்ளது. தொடர்ந்து ஆங்கிலேயப்படை அங்கு தங்கியது. அக்காலகட்டத்தில் இறந்த படையினரின் உடல்கள் அங்கேயேப் புதைக்கப் பட்டன. அதில் முக்கியமானவர் ஜான் இன்னிஷ் ஆவார். அவர் இறந்த தேதி20 மார்ச்சு 1802 என, இராயக்கோட்டைச் சாலையிலுள்ள பள்ளி அருகே இருக்கும் சமாதி கூறுகிறது.
|