ஆளவந்தார் அரசப் போகத்தில் திளைத்து வழிபிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற [[மணக்கால் நம்பி]] தன் குருவின் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்குஅரசவைக்குச் செல்லமுயன்றார். சாமான்யராக தென்பட்ட நம்பிகளைநம்பிகளைக் காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார். ஆளவந்தார் [[தூதுவளை]]க் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால் ஆளவந்தாரின் சமையற்கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக ஆறுமாத காலம் தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்குசமையற்கூடத்திற்குத் தினமும் வழங்கிகொண்டிருந்தார். பிறகு நிறுத்திக்கொண்டார். சின்னாட்கள் கீரையை உணவில் காணாத அரசனான ஆளவந்தார் சமைப்பவர்களைசமைப்பவர்களைக் கேட்க, அவர்கள் யாரோ ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூற, இதில் ஏதோ நுட்பம் இருப்பதை உணர்ந்த ஆளவந்தார் அடுத்த முறை அப்பெரியவர் வருவாறாயின் தம்மிடம் அழைத்துவருமாறு பணிக்க சேவகர்களும் அவ்வாறே செய்தனர்.நம்பியை நேரில்கண்ட ஆளவந்தார் உமக்கு என்ன வேண்டுமோ கேள் என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். ஆளவந்தார் தருமாறு வேண்ட நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். பின்னர்பின்னர்க் [[குருகை காவலப்பன்|குருகை காவலப்பனிடமும்]] யோகசாத்திரங்கள் பயின்று அரச பதவியைபதவியைதீ துறந்து தன் கருணையால் வைணவ சமயத்திற்கு ஆளவந்தவரும் ஆனார்.