கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 5:
==இரண்டு கலம்காரி பாணிகள்==
 
இந்திய கலம்காரி கலையில் இரண்டு பாணிகள் உள்ளன. முதலாவது [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] பாணி மற்றொன்று [[மச்சிலிப்பட்டணம்|மசூலிப்பட்டிணம்]] பாணி. முழுவதும் கைவேலைப்பாடுகளால் தயாராகும் [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] கலம்காரியில் பேனாவைப் பயன்படுத்திக் கையால் வரைந்து பின் வண்ணம் அடிக்கப்படுகிறது. இந்த கலம்காரி பாணி இந்துக் கோவில்களின் ஆதரவுடன் வளர்ந்தது. எனவே இதற்கு இந்து மத அடையாளம் உண்டு. எடுத்துக்காட்டாக கோவில்களில் பயன்படும் அழகிய திரைச்சீலைகள், சுவரில் தொங்கும் ஓவியங்கள், தேரில் இடம்பெறும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவை இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்டக் காட்சிகளுடனும் கடவுளர் உருவங்களுடனும் கலம்காரி வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளன. [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] கலம்காரி கலை இந்த அளவிற்கு வளர்ந்து புகழடைந்ததற்கு அகில இந்திய கைவினைக் கழகத்தின் தலைவி ''திருமதி.கமலாதேவி சட்டோபாத்யாயா'' அவர்களே முழுமுதற்காரணம் ஆவார். இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்தும் கலம்காரி கலையில் கடினமான பதினேழு படிகள் உள்ளன.
 
மும்பையில் உள்ள ''ஜே.ஜே.கலைப் பள்ளி'' (J. J. School of Art, Mumbai) கலம்காரி கலையால் பெரிதும் பயனடைந்துள்ளது. இந்நிறுவனம் பட்டுத்துணிகளில் இக்கலையை முயன்று வருகிறது. (எடுத்துக் காட்டு முடிச்சிட்டு சாயமிடும் (tie and dye textiles) [[ஆந்திரப் பிரதேசம்]], போச்சம்பள்ளி துணி வகைகள்).
வரிசை 12:
[[படிமம்:Brooklyn Museum - Wall Hanging (Kalamkari) - overall.jpg|thumb|புரூக்ளின் அருங்காட்சியகத்தில் உள்ள 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கலம்காரி திரைச்சீலை]]
 
கலம்காரி கலை மிகவும் பழமை வாய்ந்தது. இடைப்பட்ட காலத்தில் இக்கலை பெற்ற வளர்ச்சி வசதி படைத்த [[கோல்கொண்டா]] சுல்தானகம் மற்றும் [[ஐதராபாத் நிசாம்|ஐதராபாத் நிசாம்கள்]] மன்னர்கள் ஆகியோரைச் சுற்றியே அமைந்திருந்தது. ஆந்திரபிரதேசத்தில் பல குடும்பங்கள் இக்கலையைத் தொழிலாகவும் வருவாயீட்டும் வழியாகவும் ஆக்கிக்கொண்டனர்.
 
கலம்காரி என்பது பேனாவைப் பயன்படுத்தித் துணியில் அழகுபடுத்தும் பழங்காலக் கலை. அழகிய வேலைப்பாடு மிகுந்த மாதிரியுருக் கோலங்களைத் (patterns) தாவரச் சாயங்கள் மூலம் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்டத் துணி வகையைக் குறிப்பதற்கு இந்தக் கலம்காரி என்ற சொல் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான துணிகள் தற்போது இந்தியாவில் பல பகுதிகளிலும் தயாராகின்றன. எனினும் தென்மாவட்டங்களில் தான் இன்னமும் பழங்காலக் கலைமுறைப்படி தயாரிக்கப்படுவதால் கலம்காரி என்றால் அது தென்மாவட்டங்களில் தயாராகும் துணிகளையே குறிக்கிறது. பேனாவால் பல கோலங்கள் வரையும் கலை ஆந்திரபிரதேசத்தில் தான் தொழிலாக வளர்ந்து வருகிறது. அச்சிடப்பட்டத் துணிகளிலும் கூட நுண்ணிய மாதிரியுரு கோலங்கள் மற்றும் கண்கவர் வண்ணக்கலவைகள் எல்லாம் பேனாவினாலேயே வரையப்படுகின்றன. ஆந்திரபிரதேசத்தில் [[கடற்கரை ஆந்திரா]] மற்றும் கோல்கொண்டா பகுதிகளில் பணிபுரியும் கலம்காரி கலைஞர்களை ஆதரித்த முகலாயர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரில் இந்த துணிகளுக்குப் பெயரிட விரும்பினர். இவர்கள் இந்த வகை துணிகளுக்குச் சூட்டிய பெயர் கலம்கார் (Qua-lamkars) என்பதாகும்.<ref>{{cite web|last=Bhatnagar|first=Parul|title=Kalamkari|url=http://www.scribd.com/fullscreen/65619463?access_key=key-1i4e4emilphei76vaxgl|work=Traditional Indian Costumes and Textiles|publisher=suraj|accessdate=2004}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கலம்காரி_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது