திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நூலாசிரியர்: தரவைச் சேர்த்தல்
வரிசை 82:
[[File:Thiruvalluvar Statue at Kanyakumari 02.jpg|thumb|left|upright=1.0|[[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]]யில் ஒரு பாறைத்திட்டில் தமிழகக் கடற்கரையைப் பார்த்த வண்ணம் எழுப்பப்பட்டுள்ள வள்ளுவரின் சிலை]]
 
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தோன்றிய நூல்களில் வள்ளுவரைப் பற்றிப் பழங்கால ஏடுகளிலிருந்தும் மரபுவழியும் கிடைக்கப்பெற்றதும் வள்ளுவரது நூலிலிருந்தே அறியப்பட்டதுமான பலதரப்பட்ட தகவல்கள் காணப்படுகின்றன.{{sfn|Blackburn|2000|pp=458–464}} வள்ளுவர் குறித்து மரபுவழி வந்த தகவல்கள் அவர் [[பறையர்]] குலத்து நெசவாளர் என்றும்,{{sfn|Zvelebil|1975|pp=124–125}} அவர் உழவினைப் போற்றியதால் விவசாயத் தொழில் புரிந்த [[வேளாளர்]] குலத்தவர் என்றும்,{{sfn|Zvelebil|1973|p=156}} அவர் ஒரு பறையர்குலத் தாய்க்கும் [[அந்தணர்|அந்தணர்க்குலத்]] தந்தைக்கும் பிறந்தவர் என்றும்{{sfn|Zvelebil|1973|p=156}}{{sfn|Blackburn|2000|pp=458–464}} பலவாறு உரைக்கின்றன. [[மு. இராகவையங்கார்|மு. இராகவ ஐயங்காரது]] கருத்துப்படி "வள்ளுவர்" என்ற அவரது பெயர் "வல்லபா" என்ற ஓர் அரச அலுவலரது பதவியைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும்.{{sfn|Zvelebil|1973|p=156}} [[எஸ். வையாபுரிப்பிள்ளை]] தனது கருத்தாக "வள்ளுவன்" என்பது அரசவையில் பறை முழங்குவோரைக் குறிக்கும் சொல் என்றும் அதனால் அவர் அரசனின் படையில் முரசு கொட்டுபவராகப் பணிபுரிந்தவர் என்றும் உரைக்கிறார்.{{sfn|Zvelebil|1973|p=156}}{{sfn|Pavanar, 2017|pp=24–26}} மரபுவழி வந்த தகவல்கள் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணாகவும் சில நம்பகத் தன்மையற்றவையாகவும் விளங்குகின்றன. வள்ளுவரது பிறப்பு பற்றிய பலதரப்பட்ட செய்திகளில் சில வள்ளுவர் ஒரு மலைக்குப் பயணமாகச் சென்று [[அகத்தியர்|அகத்தியரையும்]] இன்னபிற முனிவர்களையும் சந்தித்ததாகவும் கூறுகின்றன.{{sfn|Blackburn|2000|pp=460–464}} அவர்களைச் சந்தித்துத் திரும்பி வரும் வழியில் வள்ளுவர் ஒரு மரத்தடியில் அமர அவரது நிழலானது அவர் மீது ஒரு நாள் முழுவதும் அசையாமல் நிலைகொண்டது என்றும் அங்கு அவர் ஓர் அரக்கனைக் கொன்றார் என்றும் பலதரப்பட்ட புராணத் தகவல்களும் காணப்படுகின்றன.{{sfn|Blackburn|2000|pp=460–464}} அறிஞர்கள் இவற்றிற்கு வரலாற்றுப் பதிவுகள் கிடையாது என்றும் இவையாவும் இந்திய மற்றும் உலகப் [[புராணம்|புராண இலக்கியங்களில்]] காணப்படுவதைப் போன்ற புனையப்பட்ட கதைகளாகும் என்றும் உரைக்கின்றனர். வள்ளுவரைப் பற்றிய குல வரலாறுகளும் நம்பகத்தன்மையற்றவை என்றே அவர்களால் கருதப்படுகிறது.{{sfn|Blackburn|2000|pp=459–464}} வள்ளுவருக்கு [[வாசுகி (திருவள்ளுவரின் மனைவி)|வாசுகி]] என்ற மனைவியும்{{sfn|Waghorne, 2004|pp=120–125}} [[ஏலேலசிங்கன்]] என்ற பெயரில் ஒருவர் உற்ற நண்பனாகவும் சீடனாகவும் இருந்தார் என்றும் நம்பப்படுகிறது.{{sfn|Manavalan, 2009|p=232}}{{sfn| Desikar, 1969|pp=128–130}}
 
வள்ளுவர் தனது நூலினைப் பொதுப்படையாகவும் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமலும் இயற்றியுள்ளதால் அதனைப் பல விதங்களில் பொருட்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் விளைவாகக் குறளானது பண்டைய இந்திய சமயங்களால் தங்கள் வழிநூலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.{{sfn|Zvelebil|1973|p=156}} வள்ளுவரைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளைப் போல் அவரது சமயத்தைப் பற்றியும் பலதரப்பட்ட செய்திகள் வரலாற்றுச் சான்றுகளின்றி விரவிக்கிடக்கின்றன. ஆங்கிலேயப் படையெடுப்புக்குப் பின்னர்க் [[கிறிஸ்தவம்|கிறித்தவ சமயமும்]] குறளைத் தனது வழித் தோன்றலாகக் கருதுவதைக் காணமுடிகிறது.{{sfn|Zvelebil|1973|p=156}} எடுத்துக்காட்டாக, 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தவ போதகரான [[ஜி. யு. போப்]] தனது நூலில் வள்ளுவர் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் [[அலெக்சாந்திரியா|அலெக்சாந்திரியாவைச்]] சேர்ந்த கிறித்தவ போதகரான [[பான்டேனசு|பான்டேனசுடன்]] தொடர்பிலிருந்தவர் என்றும் அதன் மூலம் அலெக்சாந்திரிய கிறித்தவ அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு [[இயேசு|இயேசுநாதரின்]] [[மலைச் சொற்பொழிவு|மலைச் சொற்பொழிவின்]] சாரமாய்த் தனது "அழகிய திருக்குறளை" யாத்தாரென்றும் கூறுகிறார்.{{sfn|Zvelebil|1975|p=125}} போப்பின் இக்கூற்றுகள் யாவும் தவறானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் அறிஞர்களால் விலக்கப்பட்டுவிட்டன.{{sfn|Manavalan, 2009|p=42}} வள்ளுவர் கூறும் அறங்கள் யாவும் கிறித்தவ அறநெறிகளல்ல என்று சுவெலபில் நிறுவுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{Ref label|D|d|none}}{{Ref label|E|e|none}} "கால மதிப்பீட்டில் குறளானது ஏனைய இந்திய இலக்கியங்களைப் போலவே சரியாக வரையறுக்கப்பட முடியாததாகவே உள்ளது" என்றும், குறிப்பாகச் "சிறந்த கருத்துகளைக் கொண்ட இலக்கியங்கள் யாவும் கிறித்தவ போதகர்களால் அவற்றின் காலமதிப்பீட்டினைக் கிறித்துவின் பிறப்பிற்குப் பிந்தையதாக்கும் நோக்குடன் பலவாறு சிதைக்கப்பட்டுள்ளது" என்றும் சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.{{sfn|Schweitzer, 2013|pp=200–205 (cited in ''Shakti'', Volume 5, 1968, p. 29)}}
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது