ச. வெ. இராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 26:
சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தில்]] இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். இவர் 1904ஆம் ஆண்டு [[சென்னை|சென்னையில்]] உள்ள [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரியில்]] தன்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை மாநிலக் கல்லூரியிலே தொடர்ந்தார். 1907ஆம் ஆண்டு ஜனவரியில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.
 
சி. விவெ. இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே [[கொல்கத்தா]]வில் உள்ள [[மகேந்திரலால் சர்க்கார்|மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால்]] நிறுவப்பட்ட [[இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்|இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில்]] (''Indian Association for the Cultivation of Science''), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் [[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்]] புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்தில்]] (''Indian Institute of Science'') 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய [[இராமன் ஆராய்ச்சி கழகம்|இராமன் ஆய்வுக்கழகத்தில்]] (''Raman Research Insitute'') இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.
 
== அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ச._வெ._இராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது