வெள்ளாறு (வடக்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''வெள்ளாறு''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலை]]த்தொடரில் உருவாகி [[சேலம்]], [[பெரம்பலூர்]], [[கடலூர்]] மாவட்டங்களுக்கு ஊடாக ஓடி [[பரங்கிப்பேட்டை]] அருகில் [[வங்காள விரிகுடா]]க் கடலில் கலக்கும் ஒரு ஆறாகும். இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. ஆண்டில் பாதிகாலம் வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் [[சோழர்]] மற்றும் [[பாண்டியர்|பாண்டியதேசத்துக்கு]] இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது.
வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ<sup>2</sup> ஆகும். [[சுவேதா ஆறு]], [[சின்னாறு]], ஆணைவாரி ஓடை, [[மணிமுக்தா ஆறு]] போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. <ref>[http://www.nwda.gov.in/writereaddata/linkimages/8343449318.pdf தேசிய நீர் மேம்பாட்டு முகமை]</ref>
==நீர் செல்லும் வழி==
==ஆற்றின் போக்கு==
[[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலை]]த்தொடரில் ஆத்தூர் அருகில் உருவான [[வசிட்ட நதி|வசிட்ட ஆறானது]], காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான், தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தலைவாசல்,கொரக்கைவாடி ஆகிய ஊர்களின் வழியாக பயணித்து, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உருவான [[சுவேதா ஆறு|சுவேதா ஆறுடன்]] முதலிலும், பின்னர் [[கல்லாறு|கல்லாருடனும்]] அயன் பேரையூர் அருகே கலக்கின்றது. இவ்விடத்திலிருந்து வெள்ளாறானது துவங்குகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளாறு_(வடக்கு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது