அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Please stop blanking articles!
No edit summary
வரிசை 2:
 
==அற்புதத் திருவந்தாதி==
சைவத்திருமுறைகளில் [[பதினோராம் திருமுறை]]யின் ஒரு பகுதியாகும் இது.
இப்பக்கத்தில் முதல் 50 பாடல்கள் உள்ளன. மீதிப் பாடல்களைப் பார்க்க [[இரண்டாம் பக்கத்துக்குச் செல்லவும்]]
இது 101 பாடல்களைக் கொண்டது. இதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் உள.
 
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
 
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
 
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
 
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1
 
 
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
 
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
 
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
 
அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2
 
 
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
 
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்
 
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
 
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3
 
 
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
 
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
 
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
 
எம்மைஆட் கொண்ட இறை..................................4
 
 
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
 
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
 
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
 
வந்தால் அது மாற்றுவான்......................................5
 
 
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
 
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
 
முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
 
என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6
 
 
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
 
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
 
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற
 
அம்மானுக் காளாயினேன்.......................................7
 
 
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
 
ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய
 
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
 
அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8
 
 
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
 
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
 
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
 
எப்பொருளு மாவ தெனக்கு......................................9
 
 
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
 
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
 
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
 
உண்டே எனக்கரிய தொன்று...................................10
 
 
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
 
ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்
 
கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்
 
அங்கையாற் காளாம் அது......................................11
 
 
 
 
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
 
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
 
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
 
தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12
 
 
தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்
 
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
 
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
 
சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13
 
 
தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்
 
தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்
 
பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
 
நீணாகத் தானை நினைந்து......................................14
 
 
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்
 
புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து
 
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
 
கென்செய்வான் கொல்லோ இனி..................................15
 
 
இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
 
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
 
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
 
கனைக்கடலை நீந்தினோம் காண்................................16
 
 
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
 
காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்
 
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
 
ஆதியாய் நின்ற அரன்.........................................17
 
 
அரனென்கோ நான்முக னென்கோ அரிய
 
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
 
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
 
யானவனை எம்மானை இன்று....................................18
 
 
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
 
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
 
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
 
ஆவானைக் காணும் அறிவு.......................................19
 
 
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
 
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற
 
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
 
அப்பொருளும் தானே அவன்......................................20
 
 
அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்
 
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
 
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
 
மயனாகி நின்றானும் வந்து.......................................21
 
 
வந்திதனைக் கொள்வதே ஒக்குமிவ் வாளரவின்
 
சிந்தையது தெரிந்து காண்மினோ - வந்தோர்
 
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
 
பிரான்நீர் உம்சென்னிப் பிறை.....................................22
 
 
பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்
 
இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற
 
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
 
எந்தையா வுள்ள மிது............................................23
 
 
இதுவன்றே ஈசன் திருவுருவ மாமாறு
 
இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
 
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாய்என் சிந்தனைக்கே
 
இன்னும் சுழல்கின்ற திங்கு........................................24
 
 
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
 
எஙகும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
 
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
 
நாமவனைக் காணலுற்ற ஞான்று....................................25
 
 
ஞான்ற குழற்சடைகள் பொன்வரை போல் மின்னுவன
 
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பி்ன் - ஞான்றெங்கும்
 
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
 
அக்கயலே தோன்றும் அரவு......................................26
 
 
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
 
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் -முரணழிய
 
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
 
பொன்னாரம் மற்றொன்று பூண்.....................................27
 
 
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
 
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
 
பொன்முடிமேற் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்கு
 
என்முடிவ தாக இவர்...........................................28
 
 
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
 
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
 
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
 
பேய்க்கோலம் கண்டார் பிறர்.....................................29
 
 
பிறரறிய லாகாப் பெருமையரும் தாமே
 
பிறரறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
 
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
 
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.......................................30
 
 
மகிழ்தி மடநெஞ்சே மானிடரில் நீயும்
 
திகழ்தி பெருஞ்சேமம் சேர்ந்தாய் - இகழாதே
 
யாரன்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
 
பேரன்பே இன்னும் பெருக்கு......................................31
 
 
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
 
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
 
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
 
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்..................................32
 
 
நூலறிவு பேசி நுழைவிலா தார் திரிக
 
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்தது
 
எக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
 
அக்கோலத் தவ்வுருவே யாம்.....................................33
 
 
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
 
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
 
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தா லுள்ளி
 
அருகணையா தாரை அடும்......................................34
 
 
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்து
 
இடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
 
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
 
மணிமிடற்றின் உள்ள மறு.......................................35
 
 
மறுவுடைய கண்டத்தீர் வாரசடைமேல் நாகம்
 
தெறுமென்று தேய்ந்துழலும் ஆவா - உறுவான்
 
தாளரமீ தோடுமேல் தானதனை அஞ்சி
 
வளருமோ பிள்ளை மதி.........................................36
 
 
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
 
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
 
என்பாக்கை யாலிகழா தேத்ததுவரேல் இவ்வுலகில்
 
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.................................37
 
 
ஈண்டொளி சேர்வானத் தெழுமதியை வாளரவம்
 
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
 
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு
 
கூரேறு கானேனக் கொம்பு......................................38
 
 
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்
 
அம்பவள மேனி யதுமுன்னம் - செம்பொன்
 
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
 
மணிவரையே போலும் மறித்து...................................39
 
 
மறித்து மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
 
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
 
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்டு
 
உள்ளாதார் கூட்டம் ஒருவு......................................................40
 
 
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
 
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
 
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
 
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து...............................41
 
 
நேர்ந்தரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
 
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
 
வளங்குழவித் தாய் வளரமாட்டாதோ என்னோ
 
இளங்குழவித் திங்க ளிது.......................................42
 
 
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்
 
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
 
வானோர் விலக்காரேல் யாம் விலக்க வல்லமே
 
தானே யறிவான் தனக்கு........................................43
 
 
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
 
எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய
 
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
 
பேராளன் வானோர் பிரான்......................................44
 
 
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
 
பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
 
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையிலும்
 
இங்குற்றான் காண்பார்க் கெளிது................................45
 
 
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
 
அளியீர் அறிவி லீர்ஆவா -ஒளிகொள்மிடற்று
 
எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
 
சிந்தையராய் வாழும் திறம்.....................................46
 
 
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
 
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
 
இருவடிக்கண் ஏழைக் கொருபாக மீந்தான்
 
திருவடிக்கண் சேரும் திரு.....................................47
 
 
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
 
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
 
இதுமதியென் றொன்றாக இன்றளவும் தேராது
 
அதுமதியொன் றில்லா அரா.....................................48
 
 
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
 
விராவு கதிர்விரிய வோடி விராவுவதால்
 
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
 
தன்னோடே யொப்பான் சடை...................................49
 
 
சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து
 
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் -முடிமேல்
 
வலப்பாலக் கோல மதிவைத்தான் தன்பங்கின்
 
குலப்பாவை நீலக் குழல்.......................................50
"https://ta.wikipedia.org/wiki/அற்புதத்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது