கொரியப் பிரிவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 23:
[[படிமம்:Welcome_Celebration_for_Red_Army_in_Pyongyang2.JPG|மையம்|thumb|வரவேற்பு விழாவில் எடுத்த புகைப்படம்]]
 
உருசியாவின் ஆக்கிரமிப்புக்கு அஞ்சி அமெரிக்கா தன் கொள்கைகளை அதிவேகமாகத் தென்கொரியாவில் கட்டமைத்தது. இதற்கிடையே அமெரிக்கா மற்றும் உருசியாவின் இந்தத் துண்டாட்ட ஒப்பந்தம் ('''நம்பிக்கைக் கூட்டணி''' என்று அழைக்கப்பட்டது) கொரியர்களால் அவ்வப்போது எதிர்க்கப்பட்டு வந்தது. இத்தகைய போராட்டங்கள் உடனடியாக ஒடுக்கப்பட்டன.
 
[[படிமம்:Anti-Trusteeship_Campaign.jpg|thumb|திசம்பர் 1945 இல் அமெரிக்க உருசிய ஒப்பந்தத்திற்கு எதிராக தென் கொரியர்கள் நடத்திய போராட்டம்]]
 
=== மாஸ்கோ மாநாடு ===
திசம்பர் 1945 இல் [[மாஸ்கோ]] மாநாட்டில் வடகொரியாவை உருசியாவும் [[சீனா|சீனாவும்]] ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டாள்வதென்றும் தென்கொரியாவை அமெரிக்காவும் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டனும்]] ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டாள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் உருசியாவுக்குமான பனிப்போர் முற்றி இருந்தது.
 
மாஸ்கோ மாநாட்டில் உருவாக்கப்பட்ட அமெரிக்க உருசிய கலந்தாய்வுக் கழகம் 1946 மற்றும் 1947 இல் சந்திக்க, இரண்டு சந்திப்புகளும் தோல்வியில் முடிவடைந்தன. இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா இந்த பிரச்சனையை முன்னெடுத்துச் சென்றது.
 
=== ஐக்கிய நாடுகளின் தலையீடு ===
14 நவம்பர் 1947 அன்று கொரியாவில் இருந்து அயல்நாட்டு இராணுவங்கள் வெளியேற வேண்டும் என்றும் வாக்கெடுப்பு நடத்தப்பெற்று கொரிய அரசாங்கங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகளின் சபை]] அறிவித்தது. இந்த மாற்றத்தை நிர்வகிக்க ஐக்கிய நாடுகளின் தற்காலிக கொரியக் கழகம் உருவாக்கப்பட்டது.
 
[[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டணி]] இந்த அறிவிப்பை முற்றிலுமாக புறக்கணித்தது. ஐக்கிய நாடுகள் நடத்தும் வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தது. எனவே தென்கொரியாவில் மட்டும் முதன்முதலாக வாக்கெடுப்பு நடைபெற்றது.
 
[[படிமம்:South_Korean_general_election_1948.JPG|thumb|10 மே 1948 இல் தென் கொரியாவில் நடைபெற்ற வாக்கெடுப்பு]]
 
பல்வேறு கொரிய சங்கங்கள் இந்த வாக்கெடுப்பை முற்றிலுமாக எதிர்த்தனர்எதிர்த்தன. இந்த வாக்கெடுப்பு கொடியகொரிய மண்ணை நிரந்தரமாக பிரித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆனால் எதிர்ப்புகளை மீறி தேர்தல் நடைப்பெற்றது.
 
== கொரியப் போர் ==
"https://ta.wikipedia.org/wiki/கொரியப்_பிரிவினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது