சாலிம் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
No edit summary
வரிசை 27:
'''சாலிம் அலி''' (''Sálim Ali''; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞரும் ஆவார். சாலிம் அலியின் முழுப்பெயர் சாலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் [[இந்தியா]]வில் முதன்முதலில் [[பறவை]]களைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் [[பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம்|பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின்]] புரவலராக விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.
 
சாலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றிமட்டுமின்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவைபின்னிப் பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்தசூழியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
 
[[இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு]] ''(Handbook of the Birds of India and Pakistan)'' என்ற நூற்தொகுதியும் [[ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி]] ''(The Fall of Sparrow)'' என்ற தன்வரலாற்று நூலும் சாலிம் அலியின் முக்கிய நூல்களாகும்.
 
1958-ஆம் ஆண்டு [[பத்ம பூசண்]] விருதினையும் 1976-ஆம் ஆண்டு [[பத்ம விபூசண்]] விருதினையும் சாலிம் அலி பெற்றார்; பல பறவையினங்களும் சாலிம் அலியின் பழந்தின்னி வெளவாலும் இரு பறவைகள் சரணாலயங்களும் ஓர்ஒரு நிறுவனமும் அவர் பெயர் தாங்கியுள்ளன.
 
==இளமைப் பருவமும் பறவை நோக்கலும்==
 
[[1876]] ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (''Khethwadi'') என்ற ஊரில் சாலிம் அலி பிறந்தார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே சாலிம் அலி ஒரு வேட்டை பிரியர். பறவைகள் மீது சாலிம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு [[சிட்டுக் குருவி]]யை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சாலிம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சிற்றப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (''W S Millard'') என்பவரிடம் சாலிம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சாலிம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது. அப்பொழுதிலிருந்து சாலிம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு தொழிலில் உதவுவதற்காக இடையில் [[பர்மா]] சென்றுவிட்டார். அங்குச்அங்கு சென்றும் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் [[1920]]இல் மீண்டும் சாலிம் அலி பம்பாய் திரும்பினார்.
[[Image:Petronia xanthocollis.jpg|thumb|200px|[[மஞ்சள்-தொண்டை சிட்டுக்குருவி|மஞ்சள் தொண்டைச் சிட்டு]]]]
 
பர்மாவிலிருந்து திரும்பியவுடன் சாலிம் அலிக்கு [[விலங்கியல்]] துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அவருக்கு வழிகாட்டி வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சாலிம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சாலிம் அலி [[ஜெர்மனி]] சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் (''Dr Irwin Strassman'') என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து [[இந்தியா]] திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சாலிம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவேஏற்கெனவே பார்த்துவந்தபார்த்து வந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.
[[Image:SalimAliLabel.jpg|thumb|மைசூர் மாகாண பறவை கணக்கெடுப்பின்போதுகணக்கெடுப்பின் போது சாலிம் அலி சேகரித்த பறவை பற்றிய குறிப்பு]]
 
==திருமண வாழ்க்கை==
சாலிம் அலியின் 18-ஆவது வயதில், 1918 திசம்பரில் சாலிம் அலிக்கும் தெஃமினாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சாலிம் அலியின் வணிகம் காரணமாக இவர்கள் இருவரும் சிறிது காலம் பர்மாவில் வாழ்ந்தனர்.<ref name="சலீம் அலி - நூல்">{{cite book | title=பறவை இயல் நிபுணர் சாலிம் அலி | publisher=கானுயிர் பாதுகாப்புக் கழகம், மேட்டுப்பாளையம் | author=ச, முகமது அலி | year=1996 | location=மேட்டுப்பாளையம் | pages=50}}</ref>
திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சாலிம் அலி வேலையின்றி வாடினார். ஆனால் அவரது மனைவி தெஹ்மினா பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு அவரைத் தாக்கவில்லை. வேலையின்றி இருந்த நாட்களில் சாலிம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்தவீட்டுத் தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டுஉட்கார்ந்து கொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த [[தூக்கணாங்குருவி]]யின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றியஅதைப் பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார்குறித்துக் கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டுகுறிப்புகளைக் கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சாலிம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது.
 
==பறவையியல் ஆராய்ச்சி==
 
சாலிம் அலி பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்த பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சாலிம் அலியின் வழக்கம். இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சாலிம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கைநூல் (The HandBook on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார். இந்தியப் பறவைகளைப் பற்றிபற்றித் தெரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத நூல் இது. இந்நூல் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
சாலிம் அலியின் உலகமே இந்திய நாட்டுப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது. இந்நிலையில் அவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (''S.Dillon Ripley'') என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்ஏற்படுத்திக் கொண்டார். அப்போது இந்தியத் துணைக்கண்டத்துப்துணைக் பறவைகளைப்பற்றிகண்டத்துப் பறவைகளைப் பற்றி 10 தொகுதிகளைக்கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, [[வலசை]] போதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன. பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதைஅறிந்து கொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றிமட்டுமின்றி, வாழ்க்கைப் பாணியாகவே சாலிம் அலி மேற்கொண்டிருந்தார். மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சாலிம் அலிக்கு அப்பட்டம் மிகவும் பொருத்தமே.
 
==சாலிம் அலி பறவையியல் ஆராய்ச்சி செய்த முக்கிய இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாலிம்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது