அறிவியல் தமிழ் மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அறிவியல் தமிழ் மன்றம்''' என்பது [[அறிவியல் தமிழ்|அறிவியல் தமிழை]] வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் [[தமிழ்நாடு]] அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். "தமிழக அரசு தமிழை [[அறிவியல்]] தமிழாகக் கட்டுக் கோப்புடன் வளர்த்தெடுக்க, அரசுத் துறையாக அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பையே தமிழ் வளர்ச்சித் துறையின் அங்கமாக உருவாக்கியுள்ளது. மைய அரசு தமிழைச் [[செம்மொழி]]யாக ஏற்று அறிவித்துள்ளதன் விளைவாக மனிதவள மேம்பாட்டுத்துறை தமிழ் வளர்ச்சிக்கான மேம்பாட்டு வாரியம் ஒன்றை உருவாக்கித் தமிழ் வளர்ச்சியில், குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது." [http://www.keetru.com/vizhippunarvu/nov06/manavai_mustafa.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20070311030042/http://www.keetru.com/vizhippunarvu/nov06/manavai_mustafa.html |date=2007-03-11 }}
 
இந்த அமைப்பின் முதல் தலைவராக [[மணவை முஸ்தபா]] நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராகப் பேராசிரியர் [[மு.பி. பாலசுப்பிரமணியம்]], உறுப்பினர், செயலராகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக [[ஈரோடு தமிழன்பன்]] , [[மு. மேத்தா]], பேராசிரியர் [[சுப. வீரபாண்டியன்]], டாக்டர் [[காந்தராஜ்]], [[சாரதா நம்பிஆரூரன்|சாரதா நம்பி ஆரூரன்]], டாக்டர் சாமுவேல் ரைட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2009-ஆம் ஆண்டில் மணவை முஸ்தபா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்பிய நிலையில், அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கவிஞர் [[கா. வேழவேந்தன்]] தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்_தமிழ்_மன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது