கஸ்தூரிபாய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
 
வரிசை 1:
[[File:Gandhi and Kasturbhai 1902.jpg|thumb|1902ல் மோகன்தாசு கரம்சந்த்காந்தி-கஸ்தூரிபாய்]]
[[File:Gandhi and Kasturba seated.jpg|thumb|1930ல் மகாத்மாகாந்தி-கஸ்தூரிபாய்]]
'''கஸ்தூரிபாய்''' (''Kasturba Gandhi,'' [[ஏப்ரல் 11]] [[1869]] – [[பெப்ரவரி 22]] [[1944]]) [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி]]யின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் போரில்]] பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.
 
==இளமை==
இந்திய நாட்டின் [[குஜராத்]] மாநிலத்திலுள்ள [[போர்பந்தர்]] எனும் ஊரில் பெரும்வணிகர்பெரும் வணிகர் குடும்பத்தில் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி [[குஜராத்தி]]. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மோகன்தாஸ் காந்தியை]] மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார்<ref>http://www.iloveindia.com/indian-heroes/kasturba-gandhi.html</ref> கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் [[இலண்டன்]] சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.
 
==அரசியல்==
கணவரின் சத்தியம், அகிம்சை, [[இந்திய விடுதலை இயக்கம்]] ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்காவின்]] [[டர்பன்]] நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்ட மயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.
1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்காவின்]] [[டர்பன்]] நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.
 
இந்தியாஇந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
 
==விடுதலைப் போரில் ஈடுபாடு==
1915ல் இந்தியாவிற்கு திரும்பியபின்இந்தியதிரும்பியபின் இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். [[சபர்மதி ஆசிரமம்|சபர்மதி ஆசிரமத்தில்]] தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.
 
சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒருஓர் இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.
 
==இறுதிகாலம்==
"https://ta.wikipedia.org/wiki/கஸ்தூரிபாய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது