அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்புகைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்புAdvanced mobile edit
வரிசை 86:
}}
{{கதம்பர்}}
கடம்பர் வம்சம் ([[கன்னடம்]]: ಕದಂಬರು) (345 - 525 கி.பி) கருநாட்டக [[உத்தர கன்னட மாவட்டம்|வட கன்னட மாவட்டத்தின்]] [[பனவாசி|வனவாசியை]] தலைமயிடமாகதலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த அரச குலமாகும். இவர்கள் கர்நாடகத்தின் பேரரசுகளான [[சாளுக்கியர்]], [[இராஷ்டிரகூடர்|இரட்டைக்கூடர்]] போன்றவர்களின் படைத் துணையோடு தற்போதைய [[கோவா (மாநிலம்)|கோவா]], [[கங்கல்]] போன்ற பகுதிகளை ஆண்டு வந்தனர். கதம்ப அரசனான காகுசுடவர்மனின் ஆளுகையில் கர்நாடகத்தின் பெரும்பகுதி கதம்பர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கர்நாடகத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்களில் கதம்பர்கள் மட்டுமே [[கன்னடம்|கன்னட]] மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு முன்பு ஆண்ட மன்னர்கள் அனைவரும் வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். கதம்பர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் [[கன்னடம்]] ஆட்சி மொழியாக இருந்து வந்தது. தமிழ் மொழியிலிருந்து [[கன்னடம்]] ஒரு தனி மொழியாக வளர்ந்ததற்கு கதம்பர்கள் முக்கிய காரணமானவர்கள். கதம்பர் வம்சத்தை முதன்முதலில் 345ஆம் ஆண்டு தோற்றியவர் [[மயூரசர்மா]] ஆவார்.
கதம்பர்கள் சமண மதத்தையும் ஆதரித்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சமணக்கோவில்களை நிறுவினர். கதம்பர்கள் கட்டிய பல கோவில்கள் மிகச்சிறந்த கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டவையாகும். [[பனவாசி|வனவாசியில்]] அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.