வீடுபேறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
புருஷார்த்தத் தத்துவம்
வரிசை 2:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
 
'''வீடுபேறு அல்லது மோட்சம்''' என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய [[புருஷார்த்தம்|புருஷார்த்தங்கள்]] எனப்படும் இலக்குகள் நான்கில் இறுதியானது என [[இந்து சமயம்]] சொல்கிறது. அவையாவன: [[தர்மம்]] அல்லது அறம், [[அர்த்தம்]] அல்லது செல்வம், [[காமம்]] அல்லது இன்பம் மற்றும் இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் {[[விதேக முக்தி]]} ஆகும். இந்த இறுதி இலக்கான வீடுபேற்றுக்குத் துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான [[கிரகஸ்தம்|இல்லறம்]] அவசியமானது. ஏனெனில் இல்லறத்தில் [[கர்ம யோகம்|கர்ம யோக]] வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்குத் தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான வீடுபேறு என்னும் [[மறுபிறவி]] இல்லாத நிலையான [[விதேக முக்தி|விதேக முக்தியை]] அடைகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே, '''விடுபட்ட நிலையினை''' அடைய இயலுமென்பதும் நம்பிக்கை.
 
வீடு அல்லது வீடுபேறு என்பது [[இந்து]]க் கருத்துருவில் [[சொர்க்கம்]] புகுதல் எனப்பொருளுடையது. பொதுப்பயன்பாட்டில் "வீடுதல்" என்பது "மரணித்தல்" அல்லது "அழித்தல்" எனப் பொருள்படும்.
"https://ta.wikipedia.org/wiki/வீடுபேறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது