பாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாரி
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3432566 by 2409:4072:6C88:AF3F:1C0F:955D:8BC0:A541 (talk) உடையது: ஆதாரம் இல்லா திருத்தம்
அடையாளங்கள்: மின்னல் Undo
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:பாரி முல்லைக்குத் தேரீதல் (படிமம்).JPG|thumb|பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி.]]
'''வேள்பாரி''' [[பறம்பு மலை]]யை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]]க் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தின் எவ்வி குடியில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். வேள் பாரி முத்தரையர்(ஆயர் ) இனத்தை சார்ந்தவர்.பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது [[பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்|'பிரான்மலை]]' என்று அழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் [[பாண்டியர்|பாண்டிய]] அரசின் எல்லைப் பகுதியாகச் சுட்டப் பெற்றது பறம்புமலை ஆகும். பக்தி இலக்கியக் காலத்தில்.இம்மலை 'கொடுங்குன்றம்' என்று வழங்கப்பட்டது.. பிரான்மலை [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] [[திருப்பத்தூர்]], [[காரைக்குடி]] திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
 
இவர் [[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்களில்]] ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் [[கபிலர்]] பாரியின் நண்பர். [[திருச்சி]]யிலிருந்து [[மதுரை]] செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது [[திருவாதவூர்]]. அவ்வூரில் பிறந்தவர் [[கபிலர்]] எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; 'பொய்யாநாவிற்கபிலர்' என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.
"https://ta.wikipedia.org/wiki/பாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது