'''குரு பூர்ணிமா''', [[ஆடி]] மாதத்தில் (சூன்-சூலை) வரும் ழுழுநிலவு ([[பௌர்ணமி]]) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய [[குரு|குருவை]] (ஆசிரியரை) போற்றும் முகமாக '''குரு வழிபாடு''' எனும் '''குரு பூஜை''' செய்வார்கள். இதனை துறவிகள், [[வியாசர்|வியாசபூசை]] என்றும் '''வியாச பூர்ணிமா''' என்றும் அழைப்பர்.<ref>[http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article6244656.ece குர் பூர்ணிமா]</ref><ref>http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2091</ref><ref>https://archive.org/details/GuruStotramClasses</ref>
இவ்வழிபாட்டை [[வேதம்|வேத]] [[வேதாந்தம்|வேதாந்தக்]] கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக [[குரு]] பூஜை செய்வது மரபு.
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், [[தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)|தட்சிணாமூர்த்தி]], [[பகவத் கீதை]]அருளிய [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], வேதங்களை தொகுத்த [[வியாசர்]], [[உபநிடதங்கள்|உபநிடதங்களுக்கு]] விளக்கம் எழுதிய [[ஆதி சங்கரர்]], [[மத்வர்]] மற்றும் [[இராமானுசர்]] போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.
[[பௌத்தம்|பௌத்தர்களும்]], [[புத்தர்|புத்தரை]] குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.