'''மாவீரன் அழகுமுத்துக்கோன்''' (''Maveeran Alagumuthu Kone'', 1710–17571710–1759) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு [[எட்டப்ப நாயக்கர்|ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன்]] என்கிற [[எட்டயபுரம்]] மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்.<ref>டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and presen</ref> 1728ஆம் ஆண்டு மன்னராக முடி சூட்டிக்கொண்டவர். 1750 ஆம் ஆண்டு வெள்ளையர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாமன்னர். இவரே தமிழகத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் வீர முழக்கமிட்ட கட்டாலங்குலத்து மன்னன். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.1757 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்|publisher=தினமலர் |year=ஜூலை 11,2016|url=https://m.dinamalar.com/detail.php?id=1561574}}</ref> இந்தியாவிலேயே முதன்முதலில் வெள்ளையர்களுக்கு எதிராக போர் நடத்தி , இவரது வலதுகால் சுடப்பட்டு இருப்பினும் 3மணி நேரம் போர் தொடரப்பட்டு சூழ்ச்சியால் நயவஞ்சகமாக முகமது யூசுப் கான் என்பவரால் பிடிக்கப்பட்டு பீரங்கிகள் முன்பு நிறுத்தப்பட்டார். மேலும் 248 வீரர்களும் , 6படைத்தளபதிகளும் கொல்லப்பட்டனர்...மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கூறியும் மன்னிப்பு கேட்க மறுத்த மாபெரும் வீீரன், பீீீரங்கியால் சுடப்பட்டு வீீர மரணம் அடைந்தார்.^[3]
தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் ('''அழகுமுத்து''' இவர்களின் குடும்பப்பெயர்குடும்பப்பெர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.