[[Image:Lanka99-01-jvp4.jpg|175px|right|thumb|மக்கள் விடுதலை முன்னணி, மே நாள் 1999.]]
'''மக்கள் விடுதலை முன்னணி''' (''[[சிங்களம்]]: ජනතා විමුක්ති ෙපරමුණ [[ஆங்கிலம்]]: People's Liberation Front'', ''Janatha Vimukthi Peramuna'') [[இலங்கை]]யின் அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். சுருக்கமாக JVP என அழைக்கப்படுகிறது. இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாகக் கருதப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது.