கருவாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 2:
'''கருவாடு''' ({{audio|Ta-கருவாடு.ogg|ஒலிப்பு}}) (Dried fish) என்பது [[உப்பு]] தடவப்பட்டு [[வெயில்|வெயிலில்]] உலர்த்தப்பட்ட [[மீன்]] மற்றும் பிற [[கடல்]]வாழ் [[உயிரினம்|உயிரினங்களைக்]] குறிக்கும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்கள் நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால், இவற்றைக் கடலில் இருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்று [[உணவு|உணவிற்காக]] [[விற்பனை]] செய்ய முடிகிறது.
 
==விளக்கம்==
மீன்பிடித் தொழிலில் பிடித்த மீன்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க சில வழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலொழிய இவை விரைவாக கெட்டுப்போகின்றன. உலர்த்துதல் என்பது உணவைப் பாதுகாக்கும் ஒரு முறையாகும். இம்முறையில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் உணவிலிருந்து தண்ணீரை அகற்றுவதன் இம்முறை செயல்படுத்தப்படுகிறது. சூரியஒளி மற்றும் காற்றைப் பயன்படுத்தி திறந்த வெளியில் உணவுப் பொருட்களை உலர்த்துவது பழங்காலத்திலிருந்தே உணவைப் பாதுகாக்கும் நடைமுறையாக உள்ளது.<ref name="uog">[http://www.uga.edu/nchfp/publications/nchfp/factsheets/food_pres_hist.html "Historical Origins of Food Preservation."]. Accessed June 2011.</ref> நீர் பொதுவாக ஆவியாதல் (காற்றில் உலர்த்துதல், வெயிலில் உலர்த்துதல், புகைத்தல்) மூலம் அகற்றப்படுகிறது. ஆனால் உறைதல்-உலர்த்துதல் விடயத்தில், உணவு முதலில் உறைந்து பின்னர் பதங்கமாதல் மூலம் நீர் அகற்றப்படும். பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூசணங்கள் வளர உணவில் உள்ள நீர் தேவைப்படுகிறது. மேலும் உலர்த்துவதால் உணவில் இத்தகைய உயிரிகள் உயிர்வாழ்வது தடுக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/கருவாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது