ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 116:
நிகழ்வுகளுக்கான முன்னுதாரணங்களின் ஒரு பகுதியாக மகா யசாவை ககான் அறிவித்தார். தனது தந்தையின் ஆணைகள் மற்றும் சட்டங்களின் நீடித்த தன்மையை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் தன் ஆணைகள் மற்றும் சட்டங்களையும் அதில் இணைத்தார். குறுல்த்தாய்களின்போது அணியும் ஆடைகள் மற்றும் நடத்தைகள் குறித்த விதிகளை ஒக்தாயி உருவாக்கினார். பேரரசு முழுவதும் 1234ஆம் ஆண்டு இவர் [[யாம்]] நிலையங்களை உருவாக்கினார். அந்த நிலையங்களுக்கு வரும் குதிரை வீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையான ஒரு பணியாளரையும் ஒவ்வொரு நிலையத்திற்கும் நியமித்தார்<ref>Josef W. Meri, Jere L. Bacharach ''Medieval Islamic Civilization'', p. 632.</ref>. ஒவ்வொரு 40 கிலோமீட்டர் தூரத்திற்கும் யாம் நிலையங்கள் நிறுவப்பட்டன. அங்கு வருபவர்களுக்குப் புதுக் குதிரைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான குறிப்பிடப்பட்ட பொருட்களை யாம் பணியாளர்கள் வழங்கினர். யாம் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட குடியிருப்புகள் மற்ற வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன. ஆனால் அவர்கள் கொடுக்கும் பொருட்களுக்குக் குப்சூரி வரியைச் செலுத்த வேண்டியிருந்தது. சகதாயி மற்றும் படு ஆகியோர் தங்களது யாம் நிலையங்களை தனித்தனியாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஒக்தாயி ஆணையிட்டார். உயர்குடியினர் [[கெரஜ்|கெரஜ்கள்]] மற்றும் [[ஜர்லிக்|ஜர்லிக்குகளைக்]] கொடுப்பதற்குக் ககான் தடை செய்தார். கெரஜ் என்பவை பட்டிகைகளாகும். இப்பட்டிகையைக் கொண்டவருக்கு குடிமக்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைக் கோருவதற்கு அதிகாரம் இருந்தது. தசமத்தின் அடிப்படையிலான ஒவ்வொரு 100 [[செம்மறியாடு|செம்மறியாடுகளில்]] ஓர் ஆடானது அப்பிரிவில் உள்ள ஏழைக்காக ஒதுக்கப்பட வேண்டுமென ஒக்தாயி ஆணையிட்டார். ஒவ்வொரு மந்தையிலும் உள்ள ஒரு செம்மறியாடு மற்றும் ஒரு பெண் குதிரை ஆகியவை பெறப்பட்டு ஏகாதிபத்திய மேசையின் மந்தை உருவாக்கப்பட வேண்டுமென ஒக்தாயி ஆணையிட்டார்.<ref>Mongolia Society – Occasional Papers – p. 17.</ref>
 
== கரகோரம் ==
[[File:Karakorum - Tortue Sud.jpg|thumb|கரகோரத்தின் கல் ஆமை]]
{{Main|கரகோரம்}}
 
1235 முதல் 1238 வரை நடு மங்கோலியா வழியாகத் தான் ஆண்டுதோறும் [[நாடோடி|நாடோடிப்]] பயணம் மேற்கொள்ளும் வழியின் நிறுத்தங்களில் தொடர்ச்சியான அரண்மனைகள் மற்றும் ஓய்வுக் கூடங்களை ஒக்தாயி கட்டினார். இதில் முதல் அரண்மனையான வனங்கோங் அரண்மனையானது வட சீன கைவினைஞர்களால் கட்டப்பட்டது. இந்த இடத்திற்கு அருகில் வீடுகளைக் கட்டுமாறு தனது உறவினர்களுக்குப் பேரரசர் அறிவுறுத்தினார். இந்தத் தளத்திற்கு அருகில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கைவினைஞர்களைக் குடியமர்த்தினார். [[கரகோரம்|கரகோர]] நகரத்தின் கட்டுமானமானது 1235ஆம் ஆண்டு முடிவு பெற்றது. இந்த நகரத்தில் வெவ்வேறு குடியிருப்புப் பகுதிகளை இஸ்லாமிய மற்றும் வட சீனக் கைவினைஞர்களுக்கு ஒக்தாயி ஒதுக்கினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒக்தாயியின் விருப்பத்திற்குப் பாத்திரமாகுவதற்காகப் போட்டியிட்டனர். நகரத்தைச் சுற்றிலும் நான்கு பக்க வாயிற்கதவுகளைக் கொண்ட மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. இதனுடன் தனிநபர் குடியிருப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. இந்நகரத்திற்கு முன்னர் கிழக்காசியாவில் பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல ஒரு இராட்சதக் கல் ஆமையும், அதன்மேல் கல்வெட்டுத் தூணும் அமைக்கப்பட்டது. தோட்டத்தின் வாயிற்கதவுகளைப் போன்ற கதவுகளைக் கொண்ட ஒரு கோட்டையும் இங்கிருந்தது. தொடர்ச்சியான ஏரிகள் உருவாக்கப்பட்டன. அவை ஏராளமான நீர்ப்பறவைகள் கூடும் இடங்களாகத் திகழ்ந்தன. தன்னுடைய பேரரசின் பௌத்த, இஸ்லாமிய, தாவோயியம் மற்றும் கிறித்தவ மதத்தினருக்காகப் பல வழிபாட்டு இடங்களை ஒக்தாயி உருவாக்கினார். சீனர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒரு கன்பூசியக் கோயில் இருந்தது. அங்கு சீன நாட்காட்டியை மாதிரியாகக் கொண்டு எலு சுகை ஒரு புதிய நாட்காட்டியை உருவாக்கும் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
==மேலும் காண்க==
* [[குப்லாய் கான்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது