ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்* |
சி *விரிவாக்கம்* |
||
வரிசை 138:
இந்நிகழ்வு நடந்ததாக குற்றம் சாட்டும் ஓர் இடமானது 1252ஆம் ஆண்டு [[அடா-மாலிக் ஜுவய்னி|சுவய்னி]] (1226-1283) எழுதிய [[தரிக்-இ ஜகான்குசாய்]] (உலகத் துரந்தரரின் வரலாறு) என்ற நூலில் 32வது அத்தியாயத்தில் காணப்படுகிறது.<ref>{{cite book |last1=Boyle |first1=John Andrew |title=The History of the World Conqueror by Ala-ad-din Ata-Malik JUVAINI, Translated from the text of Mirza Muhammad Qazvini |date=1958 |publisher=Harvard University Press |location=Cambridge Massachusetts |page=201}}</ref> இந்த மொத்த அத்தியாயமும் பிறகு 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [[ரசீத்தல்தீன் அமாதனி|ரசீத்தல்தீனால்]] எழுதப்பட்ட [[ஜமி அல்-தவரிக்]] நூலில் அப்படியே சிறிது மாற்றம் செய்த பிறகு இணைக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் 32இல் சுவய்னி ஒக்தாயியைப் புகழ்வதுடன் தொடங்குகிறார். ஒக்தாயி கானின் "கருணை, மன்னிக்கும் பண்பு, நீதி மற்றும் ஈகைக் குணத்தை" விளக்குவதற்காக 50 அதிக விளக்கங்களுடன் கூடிய துணுக்குகளை அவர் கொடுக்கிறார். பிறகு ஒரு துணுக்கில் ஒக்தாயியின் "வன் நடத்தை, வருத்தும் தன்மை, சீற்றம் மற்றும் பிறர் போற்றும் தன்மை" ஆகியவற்றை விளக்குகிறார். இப்பகுதியில்தான் இந்தக் கற்பழிப்பு நிகழ்வைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துணுக்குடன் இந்த அத்தியாயம் முடிவடைகிறது. இச்செயலுக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடியினத்தின் பெயரானது சுவய்னியின் நூலின் இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் தெளிவற்று உள்ளது. ஆனால் ரசீத்தல்தீனின் நூலின் கையெழுத்துப் பிரதியில் இந்தப் பழங்குடியினத்தின் பெயர் ஒயிரட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிராட்பிரிட்ஜ் மற்றும் டி ரேச்சல்வில்ட்சு ஆகியோர் இந்தப் பழங்குடியினம் ஒயிரட்டு தான் என்று குறிப்பிடப்படுவதன் உண்மைத்தன்மையின் துல்லியத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர்.<ref name="Cambridge University Press" /><ref name="Brill's Inner Asian Library" /> இந்தத் துணுக்குகள் பாரசீகக் கதையின் பாணியில் எழுதப்பட்டுள்ளன. சுவய்னி தனது 46வது துணுக்கின் ஆதாரமாகக் குறிப்பிடுவது, "இந்தக் கதையை எனது நண்பர்களில் ஒருவனின் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டேன்" என்பதாகும்.<ref>{{cite book |last1=Boyle |first1=John Andrew |title=The History of the World Conqueror by Ala-ad-din Ata-Malik JUVAINI, Translated from the text of Mirza Muhammad Qazvini |date=1958 |publisher=Harvard University Press |location=Cambridge Massachusetts |page=228}}</ref> ஒக்தாயியைப் புகழும் துணுக்குகள் முஸ்லிம் சார்பாகவும், சீனர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் தெளிவாகக் கொண்டுள்ளன. ஒக்தாயியின் சுய கட்டுப்பாடு இல்லாத தன்மையை இகழும் பாணியில் சில துணுக்குகள் காணப்படுகின்றன. சில துணுக்குகள் உண்மைத் தன்மையைக் கொண்டிருப்பதாகக் கருத வேண்டியிருந்தாலும், மற்ற சில துணுக்குகள் முஸ்லிம் வணிகச் சமூகத்தின் வதந்திக் கதைகளில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அத்துணுக்குகளைக் கவனத்துடன் அணுக வேண்டியுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. மற்றொரு பாரசீக நூலானது, சின் அரசமரபின் போர் வீரர்கள், "மங்கோலியர்களை நோக்கிக் கிண்டல் செய்ததற்காகவும்", "தீய எண்ணங்களை" வெளிப்படுத்தியதற்காகவும் மொத்தமாகக் கற்பழிக்கப்பட்டனர் என்று குறிப்பிடுகிறது. இது ரசீத்தல்தீனாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெதர்போர்டும் இதைப் பற்றித் தனது நூலில் எழுதியுள்ளார். எனினும் இந்த நிகழ்வானது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனக் கருதப்படுகிறது. இது கற்பழிப்பு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிடுகிறது.<ref name=":0">{{Cite book|title=The secret history of the mongol queens : how the daughters of Genghis Khan rescued his empire|last=Weatherford, Jack.|year=2011|isbn=9780307407160|pages=90–91|oclc=915759962}}</ref>
வெதர்போர்டின் கூற்றுப்படி, செங்கிஸ் கான் உருவாக்கிய பெண்கள் பற்றிய ஒவ்வொரு சட்டத்தையும் ஒக்தாயி மீறினார்.<ref>{{cite book |last1=Weatherford |first1=Jack |title=The Secret History of the Mongol Queens: How the Daughters of Genghis Khan Rescued His Empire |date=2011 |publisher=Broadway Paperbacks |isbn=978-0-307-40716-0 |url=https://www.google.com/books/edition/The_Secret_History_of_the_Mongol_Queens/FZ4xHb9bCZAC?hl=en&gbpv=1&bsq=Violated |language=en |quote= "Everyone knew that this barbarous act violated in spirit and in detail the long list of laws Genghis Khan had made regarding women. Girls could marry at a young age but could not engage in sex until sixteen, and then they initiated the encounter with their husbands. They could not be seized, raped, kidnapped, bartered or sold. Ogodei violated every single one of those laws."}}</ref>
==மேலும் காண்க==
|