சில கிறிஸ்தவர்கள்கிறித்தவர்கள் நரகம் என்பது பாவம் செய்பவர்கள் தண்டனை பெறும் துன்பமான இடமாக நம்புகின்றனர். மற்றும் சில கிறிஸ்தவர்கள்கிறித்தவர்கள் கடவுளை காண மோட்சத்திற்கு செல்ல தனது பாவங்களை துன்பங்கள் மூலம் களையும் இடமாக நம்புகின்றனர். <ref>http://www.bbc.co.uk/schools/gcsebitesize/rs/death/chbeliefrev2.shtml</ref> நரகத்தை பற்றிய கோட்பாடு திருவிவிலியத்தின் [[புதிய ஏற்பாடு]] பகுதியில் விளக்கப்படுகிறது். திருவிவிலியத்தின் கடைசி புத்தகமாகிய [[திருவெளிப்பாடு]] நூலில் மறுஉலக வாழ்க்கைப் பற்றி விளக்கப்படுகிறது. அதிகாரம் 20 இறைவசனம் 10-ல் ''பின்பு அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது. அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி இறைவாக்கினனும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவு பகலாக என்றென்றும் வதைக்கப்படுவார்கள்.'' என்றும், இறைவசனம் 15-ல் ''வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்.'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருப்பு ஏரியே நரகம். மேலும் [[ஆன்மா]] அழியாதது. தானியேல் இறைவாக்கினரின் நூல் அதிகாரம் 12 இறைவசனம் 13-ல் ''நீயோ தொடர்ந்து வாழ்வை முடி; நீ இறந்து அமைதி பெறுவாய்; முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ள நீ எழுந்து வருவாய்" என்றார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.