ரசீத்தல்தீன் அமாதனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி திருத்தம்
வரிசை 1:
'''ரசீத்தல்தீன் தபிப்''' என்பவர் ஈரானை ஆண்ட [[ஈல்கானரசு]] அரச மரபில் வரலாற்றாசிரியர் மற்றும் மருத்துவராகப் பணிபுரிந்தவர் ஆவார்.<ref name=EBO>[http://www.britannica.com/eb/article-9062730 "Rashid ad-Din"]. ''Encyclopædia Britannica''. 2007. Encyclopædia Britannica Online. Accessed 11 April 2007.</ref> இவர் [[அமாதான்]] என்ற இடத்தை பூர்வீகமாக உடைய [[பாரசீக யூதர்கள்|பாரசீக யூத]] குடும்பத்தில் பிறந்தார்.
 
தனது முப்பதாம் வயதின் போது [[இசுலாம்]] மதத்திற்கு மாறினார். ஈல்கான் [[கசன் (மன்னன்)|கசனிடம்]] விசியராக (சக்தி வாய்ந்த ஆலோசகர்) பணியாற்றினார். பின்னர் [[ஜமி அல்-தவரிக்|ச''மி அல்-தவரிக்'']] நூலை எழுதுமாறு கசன் இவரை பணித்தார். இந்நூல் ஈல்கானரசின் காலம் மற்றும் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒற்றை நூல் வளமாக கருதப்படுகிறது.<ref name="EI"/> இவர் 1316 ஆம் ஆண்டு வரை தனது விசியர் பதவியில் தொடர்ந்தார்.
 
ஈல்கானரசின் அரசனான [[ஒல்ஜைடு|ஒல்சைடுவுக்கு]] விடம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர் 1318இல் கொல்லப்பட்டார்.<ref name="EI" />
 
வரலாற்றாளர் மோரிசு ரொசபி ரசீத்தல்தீனை "விவாதத்திற்குரிய வகையிலே மங்கோலிய ஆட்சியின்போது பாரசீகர்கத்தில் இருந்த மிகப் புகழ் பெற்ற நபர்" என்று குறிப்பிடுகிறார்.<ref>''Genghis Khan: World Conqueror?'' Introduction by Morris Rossabi http://www.blackwellpublishing.com/content/BPL_Images/Content_store/Sample_chapter/9780631189497/GK_sample_chap.pdf</ref> இவர் தொடர்ந்து பல நூல்களை எழுதினார். [[தப்ரீசு|தப்ரிசு]] நகரத்தில் ரப்-இ ரசீதி என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
 
==வாழ்க்கை==
[[File:Mongol soldiers by Rashid al-Din 1305.JPG|thumb|ரசீத்தல்தீனின் ''சமி அல்-தவரிக்'' நூலில் சித்தரிக்கப்பட்டுள்ள மங்கோலிய வீரர்கள், 1305-1306.]]
இரசீத்தலுதீன், அமாதான் நகரத்திலுள்ள பாரசீக இயூத குடும்பத்தில் பிறந்தார். இது தற்போதைய [[அமாதான் மாகாணம்|அமாதான் மாகாணத்தில்]] உள்ளது. இவரது தாத்தா ஈல்கானரசை நிறுவிய ஆட்சியாளரான [[குலாகு கான்|குலாகு கானின்]] அவையில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றினார். ரசீத்தல்தீனின் தந்தை அவையில் ஒரு மருந்து தயாரிப்பாளராக பணியாற்றினார். இவர் தனது 30 ஆவது வயதின் போது இசுலாம் மதத்திற்கு மாறினார்.<ref>George Lane, ''Genghis Khan and Mongol Rule,''Hackett Publishing , 2009 p.121.</ref>
 
இரசீத்து ஒரு மருத்துவராக பயிற்சி செய்தார். குலாகுவின் மகனான [[அபகா கான்|அபகா கானின்]] ஆட்சியின் போது இவர் சேவை செய்ய ஆரம்பித்தார். கசுவினுக்கு அருகிலுள்ள சுல்தானியேவில், ஈல்கானரசு அவையில் பெரிய விசியராக இவர் பதவிக்கு உயர்ந்தார். இவர் விசியர் மற்றும் மருத்துவராக ஈல்கானரசு பேரரசர்கள் கசன் மற்றும் ஒல்சைடு ஆகியோரின் கீழ் சேவை செய்தார். [[அபு சயித் பகதூர் கான்|அபு சயத் பகதூர் கானின்]] ஆட்சியின் போது இவர் அரசவை சூழ்ச்சிகளில் மாட்டிக் கொண்டார். அங்கிருந்த அமைச்சர்கள் இவரது 70 வயதின் போது இவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தனர். இவரது மகன், கியாசல்தீன் இபின் ரசீத்தல்தீன் இவருக்குப் பிறகு சிறிது காலத்திற்கு விசியராகப் பணியாற்றினார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ரசீத்தல்தீன்_அமாதனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது