குத்தூசி குருசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==தொடக்க வாழ்க்கை==
[[தஞ்சாவூர் மாவட்டம்]] [[குருவிக்கரம்பை ஊராட்சி|குருவிக்கரம்பையில்]] சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/186348-.html |title=குத்தூசி குருசாமி: சுயமரியாதையின் அடையாளம்! |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-03-23}}</ref> 1923 இல் [[திருச்சிராப்பள்ளி]] தேசியக் கல்லூரியில் இடைநிலைப்படிப்பில் சேர்ந்தார். தேசியக்கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் [[மகாத்மா காந்தி|காந்தி அடிகளைக்]] கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.
 
==பொது வாழ்க்கை==
பெரியார் ஈ.வெ.ரா தொடங்கிய சுயமரியாதை சங்கத்தின் பத்திரிகையான [[குடியரசு (இதழ்)|குடியரசு]] இதழைப் படித்து [[சமயம்]], [[சாதி]] முதலிய பாகுபாடுகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார். 1927 இல் ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். குடியரசு ஏட்டில் கட்டுரைகளும் அவ்வப்போது தலையங்கங்களும் எழுதினார். பகுத்தறிவுப் பரப்புரையும் செய்தார். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் கிண்டல் கேலி
இருக்கும். அவருடைய கருத்துகள் தெளிவாகவும் தக்கச் சான்றுகளுடன் விளங்கும். அவர் ஒரு பகுத்தறிவாளர் மட்டும் அல்லாமல் [[பொதுவுடைமை]]வாதியாகவும் இருந்தார்.
 
வரிசை 12:
"நான் ஏன் கிறித்தவன் அல்லன்" என்னும் [[பெர்ட்ரண்டு ரசல்]] எழுதிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார். விடுதலை ஏட்டில் 'பலசரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார்.
 
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சடங்குகளற்ற சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். தன் பட்டபடிப்பை நிறைவு செய்தபின் [[ஈரோடு|ஈரோட்டில்]] 12 திசம்பர் 1929 அன்று அவர்பெரியாரின் முன்னிலையில் [[இராணி மேரிக் கல்லூரி, சென்னை|இராணி மேரி கல்லூரி]] இறுதியாண்டு மாணவியான [[குஞ்சிதம் குருசாமி|குஞ்சிதம்]] என்பாரைத் திருமணம் நடைபெற்றதுசெய்தார்.<ref>{{Citation|title=பெரியாரும் தமிழ் தேசியமும் {{!}} வாலாசா வல்லவன் {{!}} மன்றம் உரைகள் {{!}} Mantram Talks - Part 1|url=https://www.youtube.com/watch?v=XvKTauWy43A|accessdate=2022-10-30|language=ta-IN}}</ref> அவருடைய மனைவி [[குஞ்சிதம் குருசாமி]] கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார் குஞ்சிதம். தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றிவிட்டார்.<ref>நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்; பகுதி 1; பக்கம் 314</ref>
 
1935 இல் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார். அறிஞர்கள் சாக்ரடீசு, காரல் மார்க்சு, காந்தியடிகள், டால்சுடாய், லெனின், அன்னி பெசண்டு, செல்லி பிராட்லா, ஸ்டாலின் ஆகியோரின் வரலாற்றை எழுதினார். குடியரசு, விடுதலை,<ref>{{Cite web |url=https://www.thehindu.com/features/magazine/first-biography-of-periyar/article6407629.ece |title=Arresting portrait |last=Venkatachalapathy |first=A. R. |date=2014-09-13 |website=The Hindu |language=en-IN |access-date=2021-03-23}}</ref> புதுவை முரசு, ரிவோல்ட்டு[[ரிவோல்ட் (இதழ்)|ரிவோல்ட்]], [[குத்தூசி (இதழ்)|குத்தூசி]] , அறிவுப்பாதை (வார இதழ்), திராவிடன், பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். [[விடுதலை]] ஏட்டின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.
 
குழந்தையின் பெயருக்கு முன்னால் தன் தந்தையின் முதல் எழுத்தை (initial) போடுவதை எதிர்த்து, தாயின் முதல் எழுத்தையும் போடவேண்டும் என்று வற்புறுத்தி தானே தன் மகளின் பெயருக்கு முன்னால் இரண்டு முன்னெழுத்துகளையும் சேர்த்து அரசுப் பதிவேட்டில் பதியவைத்தார். அவர் மகளின் பெயர் கு.கு.ரஷ்யா. அதாவது குஞ்சிதம் குருசாமி ரஷ்யா.<ref name=":0">{{Cite web|url=https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2012/may/06/குகுரஷ்யா-493665.html|title=கு.கு.ரஷ்யா|website=Dinamani|language=ta|access-date=2021-12-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குத்தூசி_குருசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது