செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை''', பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் [[அத்துவஞ்சேரல் இரும்பொறை]]க்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான்<ref>[http://www.keralahistory.net/1b.htm History of Ancient Kerala]</ref>. சங்கத் தமிழ் தொகை நூலான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]], [[கபிலர்]] பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.
 
இவனுடைய காலத்தில் தமிழகத்தில் [[பௌத்தம்]] பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் [[புத்த துறவி]]களுக்குப் [[படுக்கை]]கள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் [[கல்வெட்டு]]க்களும் வெட்டப்பட்டன. [[கரூர்|கரூருக்கு]] அண்மையில் [[புகழூர்]] என்னும் இடத்தில் காணப்படும் [[புகழூர்க் கல்வெட்டு]]<ref>[http://acharya.iitm.ac.in/mirrors/vv/manuscripts/mssb.html புகழூர்க் கல்வெட்டு]</ref> என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் [[தொல்லியலாளர்]] கருதுகின்றனர்<ref>செல்வம், வே. தி., 2002. பக்.91</ref>.
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது